Friday, March 24, 2017

விராட் கோலி தோள்பட்டையில் காயம் : ஆஸிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்ப்பு!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி தரம்சலாவில் நடைபெறுகிறது, இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவாரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் மும்பை வீர்ர் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தான் 100% உடல்தகுதி பெற்றால் மட்டுமே தரம்சலா டெஸ்ட் போட்டியில் ஆடுவதாக விராட் கோலி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும் போது பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் விராட் கோலியின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள், 2-ம் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியில் மைதானத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது.

தற்போது தரம்சலா டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாகாத நிலையில் மும்பை வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இரட்டைச் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்டிற்கு இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜெயந்த் யாதவ் , குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி.

No comments:

Post a Comment