தம்மாமில் அதிரையர்கள் பங்கு கொண்ட இரத்ததான முகாம்


தம்மாம் ததஜ மண்டலம் தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிட்டலில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம். நேற்று வெள்ளிக்கிழமை (19.9.2014)
தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிட்டலில் நடைபெற்றது. இதில் மதம்,மொழி,மாநிலம்,நாடு கடந்து பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 4 மணி வரை என அறிவிப்பு செய்யபட்டிருந்தாலும் இரத்தகொடை கொடுப்பவர்கள் வந்துகொண்டே இருந்ததால் 5.30 வரை நீட்டிக்கபட்டது.  180 க்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் அளித்திருந்தனர். இருந்தும் பலர் நேரமின்மையால் கனிவுடன் திருப்பி அனுப்பபட்டனர்.

இரத்ததான முகாம் பற்றிய அறிவிப்பை FB யில் பார்த்த பலரும் இம்முகாமுக்கு வந்திருந்தது எதிர்காலத்தில் முகப்புத்தகம் சமுதாய சேவையில் இணையும் பாலமாக இருக்கும் என்பதை உணர்த்தியது.இந்த இரத்தம் ஹஜ்ஜூக்கு வரும் பயணிகளுக்கான தேவைக்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.இம்முகாமில் அதிரையர்களும் அதிகளவில் பங்கேற்று தன் பங்களிப்பை செய்திருந்தனர்.இதுபோன்ற நிகழ்ச்சிகள் மதங்களுக்கிடையேயான சாமரசத்தையும், மனிதநேயத்தை வளர்க்க உதவும் என இரத்தம் கொடுக்க வந்த மாற்றுமத சகோதரர்கள் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.





பரிந்துரை:அதிரை உபயா என்ற உபயத்துல்லா
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook