அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் அவர்களின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 வர்த்தக கடைகள் ஏலத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த கடைகளிலிருந்து வாடகையாக கிடைக்கிற வருமானத்தை அதிரை பேரூராட்சி பொதுநல பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியதாக தெரிகிறது.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியதாக தெரிகிறது.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்து நிலையப்பகுதியில் வாடகை டேக்ஸிகள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி
No comments:
Post a Comment