அமிரகம் துபாயில் நமதூர் ABCC DXB ( Adirai Boys Cricket Club - Dubai ) அணி அரையுறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னெறியது அல்ஹம்துலில்லாஹ்இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை நாடுகளை சேர்ந்த வீரர்கள், நமதூரினை சுற்றியுள்ள முத்துப்பேட்டை, மதுக்கூர், காயல்பட்டினம், கடையநல்லூர் மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகள் பங்குபெற்று அதில் இரு குழுமமாக தலா 9 அணிகள் இடம் பெற்று இரண்டு மாதங்களாக விளையாடி வந்தனர்.
இன்று காலை நடைபெற்ற Semi Final ஆட்டத்தில் VOSTOK XI CC அணியை எதிர்கொண்டது, இதில் முதலில் பேட் செய்த நமதூர் ABCC DXB அணி 248 ரன்கள் எடுத்தது, அடுத்து களமிறங்கிய VOSTOK XI CC அணி வெறும் 54 ரன்கள் எடுத்து all out ஆகி, 198ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை அடுத்து எளிதாக இறுதி போட்டிக்கு முன்னெறியது,
இதில் மிக சிறப்பாக விளையாடிய அதிரை AFCC அணியின் நட்சத்திர நாயகன் சகோ.நிஜாஸ் அவர்கள் 43 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார் அதில் 6 சிக்ஸர் மற்றும் 18 பௌண்டரிகள் அடித்து எதிர் அணியை நிலைகுலையவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றமொரு அறையுறுதி அட்டத்தில் முத்துபேட்டை XI அணியிம் ஜெஸ்சி XI அணியை எதிர்கொண்டது இதில் முத்துபேட்டை அணி வெற்றிபெற்று இறுதி போட்டியில் நமதூர் அணியை எதிர்கொள்கிறது இன்ஷா அல்லாஹ்.
வரும் வெள்ளியன்று காலை இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த முத்துப்பேட்டை XI அணியை எதிர்கொள்கிறது,
இர்ஃபான் (அதிரை தென்றல்)
No comments:
Post a Comment