நேற்றையதினம் உள்ளூர் புதுகோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் அனீப் உடல் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அனீப் என்ற மாணவன் உள்ளூர் புதுக்கோட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற மாட்டின் மீது பலமாக மோதியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் தஞ்சை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றையதினம் உயிரிழந்தார். மாணவனின் உடல் பிரேதப்பரிசோதனை செய்வதற்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால் இன்று காலை பிரேதப்பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து மாணவனின் உடல் தக்வா பள்ளி மையவாடியில் அஸர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment