அதிரை சேர்மனின் அட்டகாசமான அசத்தலில் அதிர்ந்து போன அதிரை குளங்கள்.[படங்கள்]


ஆமா!

இதுதான் உண்மை!!

தூர் வாராமல் கிடந்த சி.எம்.பி.வாய்க்காலை தூர்வாருனது யாருடைய முயற்சி?

இந்த முயற்ச்சிக்கு அப்புறம் வாய்காலில் தண்ணீர் வந்து அதிரை குளங்கள் நிரமபினதுள்ளோ.











கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதிரைக் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அவ்வப்போது பருவ மழைகள் பெய்தாலும் இப்போது நிறைந்ததுபோல் அப்போது நிறைந்ததா என்றால் அது இல்லை என்றே சொல்லவரும்.

நமதூர் சேர்மன் தம்பி அஸ்லம் அவர்களின் விசேஷித்த பலத்த முயற்சியினால் பல எதிர்ப்புகளையும் தாண்டி 2013-ம் ஆண்டு மத்தியில் சி.எம்.பி.வாய்க்கால் முறையாக சரியாக நேர்த்தியாக தூர்வாரப்பட்டது. இந்தமாதிரியாக தூர்வாரப்பட்டதினால்தான் 2013-ம் அண்டு அந்த வாய்க்காலில் தண்ணீரும், இந்த வருடம் பெய்த மழையில் எல்லா மழைநீர்களும் இலகுவாக பாய்ந்து வந்தது என்றால் அதுதான் உண்மை.

இந்த சி.எம்.பி.வாய்க்காலும் இருபது ஆண்டுகளாக கேட்பாரற்று, சீரழிந்து, ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டு தடம் தெரியாமல் இருந்தது, அந்த தடைகளை உடைத்து இன்று எல்லோரும் வியக்கும் வண்ணம் சி.எம்.பி.வாய்காலில் நீர் வந்து கொண்டு இருக்கின்றது என்றால் அது அதிரை சேர்மனாக இருக்கும் தம்பி அஸ்லம் அவர்களின் முயற்சியே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

பருவ மழை காலத்திலும், காவிரி டெல்டாக்கலுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறந்து விடும் போதும், நமதூருக்கு மேற்கே நீர் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கு. இந்த சி.எம்.பி. வாய்க்காலின் நீர்வரத்து பாதைகள் தூர்ந்து போனதினால் நமதூருக்கு தண்ணீர் கிடைக்காமல் இருந்திருக்கு, இது தான் உண்மையான நிலவரம்.

அதிரையை ஆட்சி செய்தவர்களும் சரி, வார்டு மெம்பர்களும் சரி, பொது மக்களும் சரி இதை அப்போதே சிந்தித்து செயல் பட்டிருந்தால்!? நமதூர் குளங்கள் எப்பொழுதோ நீர் நிரம்பி ததும்பி இருக்கும்.

எனினும், இன்றைய முயற்சிகள் இனி எப்போதும் துடிப்புடன் இருக்குமேயானால் அதிரையில் தண்ணீர் பஞ்சம் அறவே இருக்காது என்று சொன்னால் அது மிகையாகாது.

இறுதியில் நமது அதிரை சேர்மன் தம்பி அஸ்லம் அவர்களோடு, துணை சேர்மேனாகிய அண்ணன் பிச்சை அவர்களும் இணைந்து களம் கண்டார்கள்.

நசுவினி ஆற்றிலிருந்து பம்பிங் முறையில் நீரேற்றம் செய்யமுடியும் என்பதை செயலில் செய்து நிரூபித்து காட்டினார்கள். இவையெல்லாம் முயற்ச்சியே அன்றி வேறு ஏதும் இல்லையே.

காட்டுககுளத்தில் இரண்டு குடிநீர் மோட்டார்கள் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது, அப்படி ஓடினால்தான் ஊர் மக்களுக்கும் இடைவிடாமல் தண்ணீரை பெற முடியும் என்ற ஒரு விதியும் இருக்கின்றது, ஒரு நாளைக்கு அரை அடிக்கு மேல் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. குறையும் நீர் மட்டத்தை சரிசெய்து கொள்வது ஆளுபவர்களின் கடமை.

இது வரைக்கும் இவ்வளவும் செய்தமைக்கு, உங்களை வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook