தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டுதோறும் கடைபிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்றையதினம் முதல் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. அதிராம்பட்டினம் காவல்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ஞாயிற்றுகிழமை மாலை காவல்துறையினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக சிறியளவிலான பேரணி ஒன்றை நடத்தினர்.
இதில் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் மேலும் சிறுவர்கள் பைக்குகளில் விதிகளை மீறி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
இதே சில தினங்களுக்கு முன் அதிரையில் நடைப்பெற்ற சாலை விபத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் உயிரிழந்தது பொதுமக்கள் அனைவரின் மனதையும் அதிர்ச்சியடைய செய்துள்ளநிலையில் இதுபோன்ற சாலை பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆய்வாளர் B.பசுபதி, சிறப்பு துணை ஆய்வாளர்கள் சுந்தர், ஜீவானுந்தம், சேரன், சந்திரசேகரன், சிஐடி துணை ஆய்வாளர் ஐயாத்துரை, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் சகாபுதீன், செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் கேசவ மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment