அதிரை ஈசிஆர் சாலையில் மாடு குறுக்கே புகுந்ததால் விபத்து ! ஒருவருக்கு காயம் !!

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் உமர் ஜாஃபர். இவருடைய மகன் அபூபக்கர் ( வயது 35 ). இன்று  மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் கரையூர்தெரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் நிலை தடுமாறிய அபூபக்கர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் முகத்தில் காயங்கள் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அருகில் நின்றவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் கிடந்த அபூபக்கரை சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு ஏற்றிசென்றது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிரை ஈசிஆர் சாலையில் கேட்பாரற்று சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook