மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்திற்காக இந்திய குடிமக்கள் அனைவரும் வங்கிகளில் கணக்கு திறக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மானியம் பெற தகுதி உடைய அனைத்து தரப்பு மக்களும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்கிவருகின்றனர்.
அதுபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லைன் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னுடைய மருகளுடன் நேற்றையதினம் அரசின் நேரடி மானிய திட்டத்தில் சேர வேண்டி புதிகாக வங்கி கணக்கு திறக்க தேசிய மையமாக்கப்பட்ட இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளனர். அவர்களிடம் முதலில் வயதை விசாரித்த வங்கி அதிகாரி நீங்கள் மேலாளரை சந்திக்கு மாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளரை சந்தித்த அவர்களிடம் பெண்கள் என்றும் பாராமல் உளவுத்துறை அதிகாரி போன்று மிகவும் கடுமையாக வங்கி கணக்கு திறப்பதற்கு தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளார் அந்த மேலாளர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களுக்கு அரசின் நேரடி மானிய திட்டத்தில் சேர வங்கி கணக்கு திறக்க வேண்டும் என மீண்டும் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வங்கியின் மேலாளர் அரசின் நேரடி மானிய திட்டத்திற்காக இங்கு வங்கி கணக்கு திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வங்கியில் கணக்கு திறப்பது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறுகையில் " இந்தியாவில் வங்கி கணக்கு திறக்க அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தாலே போதுமானது. ஆனால் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மேலாளர் ஒரு மூதாட்டியின் வயதை காரணம் காட்டி அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் திட்டத்திற்காக இங்கு நாங்கள் உங்களுக்கு கணக்கு திறந்து தர முடியாது என கூறியுள்ளது மிகவும் கண்டிக்க வேண்டிய செயல். ஒரு வங்கி ஊழியராக அவர் வாடிக்கையாளர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்ய தவறிவிட்டார். எனவே இவ்வாறு பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் " என்றனர்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள் வேண்டுமென்று இதுபோல் செயல்ப்படுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.
No comments:
Post a Comment