அதிரையில் இன்று பகல் சுமார் 2.00 மணி முதல் 4.00 மணி வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.அதிரையில் குறிப்பாக கால்பந்து,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் கருசல் மணி மைதானத்தில் விளையாடி வருவது வழக்கமான ஒன்று.பொதுவாக நமது பகுதியில் மழை பெய்தால் விளையாட்டு ரத்து செய்யப்படும்.
இன்று கருசல் மணி மைதானம் சேரும் சகதியுமாக இருக்க கூடும் என்று சந்தேகமாக சென்ற விளையாட்டு பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.மைதானம் மழையின்றி காணப்பட்டதால் விளையாட்டு வீரர்களுக்கு தகவல் சொல்லி கால்பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment