துபை தேசியதின போட்டிகளில் அதிரையர்களுக்குப் பரிசு

இந்திய முஸ்லிம் கலாச்சார அமைப்பு (ஈமான்) சார்பில் நேற்று துபாயில் நடந்த 43 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காலை 9:00 மணி முதல் பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் நடந்தன.
அதிரையைச் சார்ந்த பலரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று முதல் பரிசுகளைத் தட்டிச் சென்றனர். குழந்தைகளுக்கான பலூன் உடைத்தல், தவளை ஓட்டம் ஆகிய இரு போட்டிகளில் அஸீலா ஜமாலுதீன் முதல் பரிசுகளைப் பெற்றாள். அதுபோல், முஹம்மது மீராஷா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனித்தனியே நடந்த இருபோட்டிகளிலும் முதல் பரிசைப் பெற்றனர்.
நிகழ்வின் இறுதியில் நடந்த குலுக்கல் பரிசில் இம்ரான் ஜமாலுதீனுக்கு 40 அங்குல வண்ணத் தொலைகாட்சி முதல் பரிசாகக் கிடைத்தது.
ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்திய அமைப்புகளிலேயே மிகப்பெரிய அளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook