இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத் தளமான பாபரி பள்ளிவாசலை மீண்டும் கட்டித்தர கூறி நாடுமுழுவதும் பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 நாள் அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் கலவரங்கள் போன்ற பல அசம்பாவிதங்களும் நடைபெற்றன. இதற்கிடையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் முன்பு மஸ்ஜித் இருந்த இடத்தில மீண்டும் மஸ்ஜித்தினை கட்டி தர வேண்டும் பள்ளிவாசலை இடித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக டிசம்பர் 6 தஞ்சையில் தமுமுக சார்பில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பட்டன. மேலும் அதிரையர்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment