பாபர் மசூதி இடிப்பு தினம் !

இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் !


கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்து தரை மட்டம் ஆக்கினார்கள் . இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் கட்டபஞ்சாயத்து தீர்ப்பை வழங்கி துரோகம் இழைத்துள்ளது.

இந்நிலையில் வருடந்தோறும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் ஆறாம் தேதி அன்று இஸ்லாமிய அமைப்புக்கள் நாடு முழுவதும் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் , பள்ளியை இடித்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னாள் நிறுத்த கோரியும், பாபர் மசூதி நிலத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க கோரி தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் படி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதேபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் , பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா , ஜமுமுக, உள்ளிட்ட அமைப்புகள் தனி தனியே போராட்டம் அறிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

மேலும் இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு (!) தீவிரபடுத்தபட்டுள்ளது .
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook