அதிரையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நவீன குப்பை தொட்டிகள் வாங்கப்படுமா என அதிரைவாழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிரை பேரூராட்சியின் சார்பில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகளும் பழுதடைந்து ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. தற்போது அதிரையின் எந்தவொரு இடத்திலும் குப்பை தொட்டிகள் தென்படவில்லை. வீடு, கடைகளிலிருந்து வெளியேறும் குப்பைகள் முக்கிய பகுதிகளின் வீதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றை வீதியில் சுற்றி திரியும் மாடுகளால் கிளறப்பட்டு ஆங்காங்கே சிதறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்வலர் 'அபூ இஸ்ரா' நம்மிடம் கூறியதாவது...
'அதிரை நகரின் வீதிகளில் சிதறிகிடக்கும் குப்பை கழிவுகளால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நவீன குப்பை தொட்டிகள் வாங்கி அதிரையின் முக்கிய பகுதிகளில் நிரந்தரமாக வைக்கவேண்டும். தற்போது பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் இலகுவாக கையாளும் விதத்திலும், ஆடு மாடுகள் சீண்டாத வகையிலும், பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் நவீன குப்பை கொட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறது என்றும், இவற்றை பராமரிப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படாது' என்றார்.
இதோ நவீன குப்பை தொட்டியின் படங்கள் சிலவற்றை நமது பார்வைக்கு அபூ இஸ்ரா தந்துள்ளார்.
No comments:
Post a Comment