தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. பள்ளிகளில் காலை மாலை இரவு என வாய்ப்புகள் கிடைக்கும்போது எல்லாம் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் வைத்து மாணவர்களை தேர்வு எழுத தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களால் இயன்றளவு இவர்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிகவும் தேவைப்படுகின்றது அதற்க்கு ஏற்றார்போல் மாணவர்களை சுற்றியுள்ளவர்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என மனநல நிபுணர்களும் ஆலோசனைகள் வழங்கிய படி உள்ளனர்.
இவைகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராக உதவியாக இருக்கும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வினாக்களுக்கான பதில்களை சேகரித்து புத்தமாக தொகுத்து அதனை ஆண்டுதோறும் மாணவர்களுக்கு CSC நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.
அதுபோல் இவ்வாண்டிற்கான புத்தகங்கள் இன்றுமுதல் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் புத்தகங்களை மாணவர்கள் வாங்கி படித்து பயனடைய வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
எது எப்படியோ மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லமுறையில் படித்து தேர்வினை எதிர்க்கொண்டால் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment