அதிரையில் இயங்கி வரும் பைத்துல்மால் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிலையில் அதிரை பகுதியை சேர்ந்த சமுதாய ஆர்வம்மிக்க இளைஞர்கள் 10 பேர் பைத்துல்மால் அலுவலகத்திற்கு வருகை தந்து பைத்துல்மால் நிர்வாகத்தை பற்றியும் சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
மேலும் பைத்துல்மால் பற்றி அதிரை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததை நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டினர்.அதிரையில் 24 மணி நேர மருத்துவ சேவை கொண்டு வர பைத்துல்மால் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.இந்த இளைஞர்களுடன் சந்திப்பு ஏற்பாட்டினை புதுமனை தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் அவர்கள் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பைத்துல்மால் பற்றி அதிரை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததை நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டினர்.அதிரையில் 24 மணி நேர மருத்துவ சேவை கொண்டு வர பைத்துல்மால் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.இந்த இளைஞர்களுடன் சந்திப்பு ஏற்பாட்டினை புதுமனை தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் அவர்கள் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment