அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலனோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள் என்றால் அது தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாகிவிடுகிறது.
No comments:
Post a Comment