தஞ்சையில் பரபரப்பு : ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி போராட்டம்


தஞ்சையில் ஆய்வு நடத்துவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு டி.ஆர்.பாலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதரிப்பு தெரிவித்தனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கோயமுத்தூர், கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பகுதிகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டத்தை ஆய்வு செய்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை புரிந்தார்.
ஏற்கனவே, ஆளுங்கட்சியான அதிமுகவை தவிர மற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தஞ்சையில் ஆய்வு செய்ய வந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டி.ஆர் பாலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏற்கனவே, குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த கவர்னருக்கு எதிராக இரண்டு காவல்நிலையத்தில் இரண்டு புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook