அதிரையில் நாளை மின்சரா விநியோகம் இருக்காது.!!!


அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை அன்று மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Share:

பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்து விட்டன. ஆனால் தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் வெப்பக் காற்று அதிகமாக வீசுவதால் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Share:

மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க் இயங்காது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கமிஷன் தொகையை அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மே 14ம் தேதி முதல் ஞாயிறு தோறும் விடுமுறை அளிக்கப்படும் என்று விற்பனையாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்றும் இது மே 15ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Share:

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் கொந்தளித்த இளைஞர்கள்!

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை கத்திப்பாராவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இயக்குனர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கத்திப்பாரா மேம்பாலத்தின் நடுவே, சங்கிலியால் மறித்து பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோ மீட்டனர் தூரம் வரை நின்றன.

தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், சங்கிலியை அறுத்து போக்குவரத்தை போலீசார்  சீர் செய்தனர். இதையடுத்து போராட்டகாரர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போராட்டகாரர்களுடன் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதற்கு போராட்டகாரர்கள் செவி சாய்க்காததால் , போராட்டகாரர்களை போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தி  கைது செய்தனர்.
Share:

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


வரும் 12ம் தேதி நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததையடுத்து அவர் பொது தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால், இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவித்து, தேர்தல் வேலைகளை தொடங்கியது.

இதனிடையே, அதிமுக கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்கட்சி பூசலால் அந்த கட்சியின் ஆஸ்தான சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

தொடர்ந்து, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும், தினகரன் அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணி அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்றும், தினகரன் அணி அதிமுக அம்மா அணி என்றும் பெயர் சூட்டப்பட்டது. 

அணைத்து கட்சிகளும், வேட்பாளரை அறிவித்து பிரசார களத்தில் அனல் பறக்கவிட்டனர். இதனிடையே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்த வண்ணம் இருந்ததால், பல்வேறு புகார்களை சந்திக்க தொடங்கியது இந்த இடைத் தேர்தல்.

புகார்கள் குவியத் தொடங்கியதால், தமிழக மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் சைதியை நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

29 பக்க தேர்தல் ரத்து அறிக்கையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், எப்போது நேர்மையாக தேர்தல் நடக்கும் சூழல் ஏற்படுகிறதோ அப்போது நடக்கும் என அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 35 வழக்குகள் மற்றும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Share:

TNTJ வின் முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாடு அதிரையில் சிறப்பாக துவங்கியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் கிளை 1 பள்ளி பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் இன்று ஏப். 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் துவங்கியது.இதில் அவ்வமைப்பின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், பேச்சாளர்கள் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, சேப்பாக்கம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து  நூற்றுக்கணக்கான வேண்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.






Share:

அதிரையில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் மைதானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் கிளை 1 பள்ளி பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் நாளை ஏப். 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.இதில் அவ்வமைப்பின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், பேச்சாளர்கள் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, சேப்பாக்கம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர்.



Share:

மேலும் 3 மாதங்களுக்கு ஜியோ இலவச சேவை நீடிக்கிறதா..?

டிராய் அமைப்பின் அறிவுறுத்தலுக்கிணங்க ஜியோ சம்மர் சலுகை ரத்து செய்யப்படுவதாக ஜியோ நிறுவனம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஜியோ சலுகைகள் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப் படுவதாக நாளிதழில் விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
Share:

தினமும் மாறப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை?


சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கூடிய சீக்கிரம் அமல்படுத்த இருப்பதாக தெரிகிறது. தற்போது விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் உள்ள 95% சதவீத பெட்ரோல் பங்குகளை கட்டுப்படுத்தும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளன. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அந்த நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன.
நாட்டில் உள்ள 53,000 பெட்ரோல் பங்குகளில் விலை மாற்றும் ஆட்டோமேஷன் முறை அமலில் உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை எளிதாக அமல்படுத்த முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக வலைதளங்களும் இருப்பதால் விலை மாற்றத்தையும் சுலபமாக பெட்ரோல் பங்குகளுக்கு தெரிவிக்க முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முறை அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை தினமும் சில பைசாக்கள் குறையும் அல்லது ஏறும். பெரிய மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைய மாட்டார்கள், என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Share:

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு

மும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி இலவச சேவைகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது.
இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்) அடுத்து மூன்று மாதத்துக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.
தற்போது 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். ஜியோவில் ரூ.99 செலுத்தி பிரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Share:

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77, டீசல் லிட்டருக்கு ரூ.2.91 விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது


டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைந்துள்ளன. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைந்துள்ளன. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.28-க்கு விற்பனையாகிறது. விலைக்குறைப்பைத் தொடர்ந்து இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.51-க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை ரூ.62.48-ல் இருந்து ரூ.59.57 ஆக குறையும். ஜனவரி 15 ஆம் தேதிக்கு பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook