டிராய் அமைப்பின் அறிவுறுத்தலுக்கிணங்க ஜியோ சம்மர் சலுகை ரத்து செய்யப்படுவதாக ஜியோ நிறுவனம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஜியோ சலுகைகள் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப் படுவதாக நாளிதழில் விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஜியோ 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இலவச சேவை முடிவடைந்த நிலையில், மார்ச் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைமில் இணையும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் மாதம் ரூ.303 கட்டணம் செலுத்தி டேட்டா, இலவச அழைப்பு வசதி மட்டுமின்றி அனைத்து பிரைம் சேவைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஜியோவில் பிரைம் வாடிக்கையாளராக சேருவதற்கான கெடு ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதோடு, பிரைம் வாடிக்கையாளராக சேர்ந்தவர்களுக்கு, காம்ப்ளிமென்டரி அடிப்படையில் மேலும் 3 மாதம் டேட்டா சேவையை நீட்டித்தது. ஆரம்பம் முதலே ஜியோவின் அதிரடி இலவச சேவைகளுக்கு மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், ட்ராய் (இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கேட்டுக்கொண்டுள்ளதற்கு இணங்க 3 மாத காம்ப்ளிமெண்டரி சேவையை திரும்பப் பெறுவதாக ஜியோ நேற்று அறிவித்திருந்தது. ஆனால் இன்று காலை வெளியான நாளேடு ஒன்றில் காம்பிளம்ண்ட்ரி சேவைகள் தொடரும் என ஜியோ விளம்பரப்படுத்தியிருந்தது.
எனவே இதுகுறித்து ஜியோவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “ காம்பிளிமண்ட்ரி சேவைக்கான ரீச்சார்ஜை நீங்கள் கூடியவிரைவில் செய்துகொள்ளுங்கள். இந்த சேவையை எப்போது வேண்டுமானும் நிறுத்தப்படலாம். ரீசார்ஜ் செய்தவர்களுக்கு 3 மாதம் டேட்டாக்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் ஜியோவின் இலவச டேட்டா சேவை இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நேற்று காம்ப்ளிமண்டரி சேவையை ரத்து செய்தவாக அறிவித்த ஜியோ நிறுவனம் , சேவை தொடரும் என இன்று காலையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. கஸ்டமர் சேவையை தொடர்புகொண்டால், “ எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் உடனே ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள் என தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில் ஜியோ காம்பிளிமண்டரி சேவை வருமா.. வராதா என வாடிக்கையாளர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள்.
No comments:
Post a Comment