தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கமிஷன் தொகையை அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மே 14ம் தேதி முதல் ஞாயிறு தோறும் விடுமுறை அளிக்கப்படும் என்று விற்பனையாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்றும் இது மே 15ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
No comments:
Post a Comment