பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்து விட்டன. ஆனால் தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் வெப்பக் காற்று அதிகமாக வீசுவதால் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook