அதிரை பேரூராட்சி 10,13,17,19 ஆகிய வார்டுகளுக்கு, மமக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் !





தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மனித நேய மக்கள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 10,13,17, 19 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் மமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் தெஷிமா ( வயது 38 ) க/பெ. தமீம் அன்சாரி, வார்டு எண் 10 க்கும், செளதா ( வயது 36 ) க/பெ. அஹமது ஹாஜா, வார்டு எண் 13 க்கும், ரபீக்கா, ( வயது 37 ) க/பெ. முஹம்மது சலீம், வார்டு எண் 17 க்கும், சமீமா நஸ்ரின், ( வயது 33 ) க/பெ. சாகுல்ஹமீது, வார்டு எண் 19 க்கும் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை அதிரை பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே செல்வம், துணைச்செயலர் அன்சர்கான், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது முகைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் ஷேக் அப்துல்லாஹ்,  மணிச்சுடர் சாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது, ஜாகிர் ஹுசைன் ஆகியோரும், தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்ஷா, மமக நகர செயலாளர் எஸ்.ஏ. இதிரிஸ் அஹமது, துணை செயலாளர் எம் ஆர்.ஹாலிது, தமுமுக-மமக  பொருளாளர் செய்யது முகமதுபுஹாரி, நசுருதீன், கனி, ராஜிக் அஹமது, சலீம், நெய்னா முகமது, அப்துல் ஜப்பார், இப்ராஹிம்சா உள்ளிட்ட  தமுமுக, மமக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.


Share:

அதிரையில் அ.தி.மு.க (ADMK) சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல்!

Image result for aiadmk symbol with flag hd



வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிரையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரத்தை வெளியிட்டுள்ளது:

வார்டு.           வேட்பாளர்கள்
01                       செ.உமா மகேஸ்வரி
02                       மீ.உதய குமார்
03.                      க.சிவக்குமார்
04                       அ.பிச்சை
05                       சி.விஜய ரத்தினம்
06                      வீ.சேதுராமன்
07                      சு.தமினா பேகம்
08                     அ.ஹாஜாநஜிமுத்தீன்
09                     ஷே.அகமதுஹாஜா
10                     தை.ஹாஜரா அம்மாள்
11                      ஷா.ஆரிபா
12                     அ.முகமது  தமீம்
13                     ஜெ.ஹசீனா பானு
14                    ஜெ.ஹாஜாபக்ருதீன்
15                     மு.ஜென்னத் நிஷா
16                     ப.தில்ஷாத்
17                    அ.யாஸ்மின்பீவி
18                     உ.அப்துல்ரகுமான்
19                     அ.ஜுவைரியா
20                    தே.வசந்தா

21                      அ.பவுஜிஸ்கஜிதாயா

Share:

அதிரை பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு




தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் போட்டியிடும் வார்டுகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலர் அன்சர்கான் அறிவித்தார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:
(1 வது வார்டு) லலிதா ( வயது 55 ) க/பெ. தண்டபாணி
(2 வது வார்டு ) இராம. குணசேகரன் ( வயது 56 ) , த/பெ. இராமச்சந்திரன்
(3 வது வார்டு) சண்முக வேல் ( வயது 43 ) த/பெ. சாமிக்கண்ணு
(4 வது வார்டு) பாலமுருகன் ( வயது 41 ) த/பெ. ஜெயராமன்
(5 வது வார்டு) போட்டியில்லை
(6 வது வார்டு)  போட்டியில்லை
(7 வது வார்டு) போட்டியில்லை
(8 வது வார்டு) செய்யது புஹாரி ( வயது 43 ), த/பெ. பிச்சைகனி தண்டையார்
(9 வது வார்டு) பசூல்கான் ( வயது 41 ), த/பெ. குல் முஹம்மது
(10 வது வார்டு) தீன் நிஷா ( வயது 43 ), க/பெ. இக்பால்
(11 வது வார்டு) உம்மல் மர்ஜான் ( வயது 48 ) க/பெ. அன்சர்கான்
(12 வது வார்டு) செய்யது முஹம்மது ( வயது 56 ) த/பெ. நூர் முஹம்மது
(13 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(14 வது வார்டு) இஸ்மாயில் நாச்சியா ( வயது 34 ) க/பெ. முஹம்மது சரீப்
(15 வது வார்டு)  கன்சுல் மஹ்ரிபா ( வயது 46 ) க/பெ. ஜாஹிர் உசேன்
(16 வது வார்டு) நிலோபர் ( வயது 43 ) க/பெ. என்.ஏ. முகமது யூசுப்
(17 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(18 வது வார்டு) முஹம்மது சேக்தாவூது ( வயது 40 ), த/பெ. நெய்னா முஹம்மது
(19 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(20 வது வார்டு) சந்திரா ( வயது 45 ) க/பெ. பழனிவேல்
(21 வது வார்டு) சித்தி மர்ஜூக்கா ( வயது 37 ) க/பெ. முஹம்மது இப்ராஹீம்

இவர்கள் அனைவரும் இன்று (30-09-2016 ) மதியம் வேட்பு மனுக்களை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
Share:

தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆய்வு !





தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் (29.09.2016) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு  வாக்கு எண்ணிக்கை ராஜா சரபோஜி அரசினர் கலைகல்லூரியிலும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜாஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சியும், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் :
தஞ்சாவூர்  தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியிலும், பூதலூர் ஸ்ரீசிவசாமி அய்யர் மேல் நிலைப்பள்ளியிலும், திருவையாறு சீனிவாசராவ் மேல் நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசினர் பெண்கள் மகளிர் கல்லூரியிலும், திருவிடைமருதூர் டி.ஏ.மேல் நிலைப்பள்ளயிலும், திருப்பனந்தாள் குமரகுருபர மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், அம்மாப்பேட்டை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,  பேராவூரணி புனவாசல் தூய ஆரோக்கிய அன்னை மேல் நிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்:
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்;டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை,  ஆகிய 9 பேரூராட்சிகளுக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,

பேராவூரணி, பெருமகளுர், அதிராம்பட்டிணம், ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, தாராசுரம், பாபநாசம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் கும்பகோணம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ராஜா சரபோஜி கலைகல்லூரியிலும்,  பட்டுக்கோட்டை நகராட்சி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் நகராட்சி கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் போதிய இட வசதி உள்ளதா என்றும், மின் இணைப்பு, மின்விசிறி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள்  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.ஜி.நிர்மலா, வட்டாட்சியர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share:

அதிரை மமக சார்பில் பெண் வேட்பாளர்கள் போட்டி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ள மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதிரை நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.விபரம் பின் வருமாறு.
தெஷீமா க/பெ தமீம் அன்சாரி, வார்டு  10
செளதா க/பெ அஹமது ஹாஜா, வார்டு 13
ரபீக்கா க/பெ முஹம்மது சலீம், வார்டு  17
சமீமா நஸ்ரின் க/பெ. சாகுல்ஹமீது, வார்டு  19
Share:

தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, கோயம்பேடு, அண்ணாசாலை, அம்பத்தூர், தியாகராய நகர், வண்டலூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக விடாமல் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் இன்றும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதன் காரணமாக வட மற்றும் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

பிரபல எழுத்தாளர் அதிரை அஹமத் காக்கா அவர்களின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டி



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அதிரையில் அரசியல் காட்சிகள் தங்களது வார்டுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் அதிரையின் பிரபல எழுத்தாளர் அதிரை அஹமத் காக்கா அவர்களின் மனைவி சகீனா அவர்கள் 13வது வார்டு நடுத்தெரு பகுதியில் போட்டியிடுகிறார்.அதிரை அஹமத் அவர்கள்  பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

பட்டுகோட்டையில் ASP கண்டித்து TNTJ நடத்தும் கண்டன ஆர்பாட்டம்!

img_5756


பட்டுகோட்டையை அடுத்துள்ள ஆவனத்தில் ஜனாசாவை நல்லடக்கம் செய்ய வந்த TNTJ அமைப்பினர் மீது பொய் வழக்கும் பதிந்த ASP அர்விந்த் மேனனை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.
Share:

வாகன விபத்தில் காயமடைந்த அதிரை ஃபைசல்!

அதிரை சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல். அதிரையிலிருந்து கிட்டச்சேரி நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த பொழுது தம்பிக்கோட்டை அருகே சாலையின் குறுக்கே நாய் புகுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த CBDயின் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யபட்டது. பின் மேல்சிகிச்சைக்காக வேண்டி பட்டுக்கோட்டை அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் இது அதிரையில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெறும் ஐந்தாவது விபத்தாகும்.
Share:

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் தடை !

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இது பற்றி மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது, நாளை வியாழக்கிழமை மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சார பெறும் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது
Share:

அதிரையில் SDPI கட்சி போட்டியிடும் வார்டுகள்! முதற்கட்ட அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் பரப்பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பொதுமக்களும் தங்கள் வார்டுகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் குறித்து அறிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
அதிரையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியும் குழப்பத்தில் இருந்துவரும் நிலையில் SDPI கட்சி10, 12, 13, 14, 15, 19, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிடப் போவதாக முதற்கட்டமாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் மற்ற வார்டுகள் குறித்தும் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்
Share:

அதிரை ஈசிஆர் சாலை தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி !

அதிரை  ஈசிஆர் சாலை சிஎம்பி வாய்க்கால் தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.



அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளின் ஈசிஆர் சாலை தென்புறத்தில் உள்ள 12 அடி அகலமுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராஜ், சர்வேயர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்.


Share:

அதிரை அருகே பயங்கரம்! லாரி ஏறியதில் நடந்துசென்றவர் உடல் நசுங்கி மரணம்

img_1096

அதிரையை அடுத்த  தம்பிக்கோட்டையை சேர்ந்த வீரா மற்றும் வீரயன் ஆகியோர் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் வீரயன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் உடலை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் வீரா மேல்சிகிச்சைக்காக வேண்டி தஞ்சாவூர் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிரை காவல்துறை தரப்பில் கூறுகையில் “இரவுநேரத்தில் சரிவர தூங்காமல் லோடு ஏற்றிவந்ததால் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்பொழுது நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.
Share:

மரண அறிவிப்பு (ஹாபிழ் முஹம்மது ஹாஸிம்)


அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அப்துல் வாஹிது, மர்ஹூம் ஹாஜி யாகூப் ஹசன் ஆகியோரின் பேரனும், அஹமது அஷரப் அவர்களின்  மகனும், முஹம்மது மீராசாஹிப், அஹமது ஃபவ்ஜி ஆகியோரின் இளைய சகோதரருமாகிய 'ஹாஃபிழ்' முஹம்மது ஹாசிம் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Share:

​காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீசிப்பட்டதால் பரபரப்பு!

உத்தரபிரதேத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீச்சப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் சீதாப்பூரியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ராகுல்காந்தியை நோக்கி காலணியை வீசினார். இருப்பினும் அந்த காலணி, ராகுல்காந்தி மீது படாமல், அவர் சென்ற வாகனத்திற்கு விழுந்தது. 
இதனையடுத்து காலணியை வீசிய இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share:

எஸ்டிபிஐ கட்சியிலிருந்து 2 பேர் அதிரடி நீக்கம் !



SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் செயல்வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாக உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெறும் மாவட்டம் தழுவிய அணைத்து விருப்பமனு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பரிசீலனையில் தங்களது சுய லாபத்திற்காக SDPI கட்சியின் கொள்கையை மீறியதால் அதிராம்பட்டினம் தட்டாரதெருவை சேர்ந்த முஹமது அபூபக்கர் அவர்களின் மகன் ஜெகபர் சாதிக் மற்றும் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த அஹமது கலிபா அவர்களின் மகன் நஜ்முதீன் ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பேரில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கபடுகிறார்கள் என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துக்கொள்வதாக மாநிலபொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Share:

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு துவக்கம் !

whatsapp-image-2016-09-21-at-11-58-35-pm




சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு வியாழனன்று காலை 10:20 மணியளவில் செக்கடி பள்ளியில் தொடங்கப்பட்டது.
சகோ. சம்சுதீன் அவர்கள் மேற்பார்வையில், கோ.மு.ஜமால் காக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட முஹல்லாவாசிகளின் ஒருமித்த ஆதரவுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் : அஹமது அனஸ்
செயலாளர்: முஹம்மது சலீம்
பொருளாளர்: சேக் அலி
செயற்குழு ஆலோசகர்கள்:
ஜமால் முஹம்மது
இத்ரீஸ் அஹமது
முஹம்மது ஹனீபா
ஜாஹிர் ஹுசேன்
சாகுல் ஹமீது
முஜீப்
செயற்குழு உறுப்பினர்கள்
சேக்தம்பி
நெய்னா முஹம்மது
அப்துல் ரஹ்மான்
அப்துல் ரஷீத்
ஹாரிஸ்
முஹம்மது சாலிஹ்
கமாலுதீன்
ஜாபர் சாதிக்


Share:

கோவையில் கலவரத்தில் செல்போன் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த இந்து முன்னனியினர்!

கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது பூட்டியிருந்த கடைக்குள் புகுந்த இந்து அமைப்பினர் சிலர் அங்கிருந்த செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்கள் சிலரால் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
Share:

உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு! அப்போ அதிரை பேரூராட்சி?

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
Share:

மின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?


 
Share:

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை தேர்வு


Image result for thanjavur
Share:

பட்டுக்கோட்டையில் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க அரசை கண்டித்து PFI அமைப்பினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

இந்தியாவை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசால் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமும், இஸ்லாமிய வன்முறைகளும் மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று மாலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், போஸ்ட் ஆபிஸ் முக்கம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிரை வழக்கறிஞர் நிஜாம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook