அக்., 17,19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு



தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை )
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3
வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4
வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்
ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21

மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, ஈரோடு, சேலம், வேலுார் மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 17 ம் தேதி நடைபெறும்.
சென்னை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.

சென்னையில் 5,531 ஓட்டுச்சாவடிகள் உட்பட தமிழகம் முழுவதும் 91,098 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் 5.8 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
37 தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட 6.5 லட்சம் தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்

ஓட்டுப்பதிவு நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வேட்டுமனுக்கள் பெறும் நேரம் - காலை 10 மணி முதல் மாலை 5 வரை
வேட்டுமனுக்கள் அக்டோபர் 6 ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம்.


இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook