அதிரை சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல். அதிரையிலிருந்து கிட்டச்சேரி நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த பொழுது தம்பிக்கோட்டை அருகே சாலையின் குறுக்கே நாய் புகுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த CBDயின் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யபட்டது. பின் மேல்சிகிச்சைக்காக வேண்டி பட்டுக்கோட்டை அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் இது அதிரையில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெறும் ஐந்தாவது விபத்தாகும்.
No comments:
Post a Comment