அதிரையில் பா.ஜ.க அரசை கண்டித்து ம.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு ! ( படங்கள் )


இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்லராஜா தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஃப்ஐ ஆதரவு:
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில செயலர் நாச்சிகுளம் தாஜுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதில் மஜக மாநில துணைச்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உட்பட மஜகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.






Share:

மெக்கா நகரம் மீது ஏவுகணை தாக்குதல்.. தடுத்து அழித்த சவுதி அரேபியா

ரியாத்: இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்தின் மீது ஹவுத்தி இனப்போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஹவுத்தி இனத்தவர் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுத்தி இனப் போராளிகளால் வீசப்பட்ட அந்த ஏவுகணையை மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தியதோடு, அதனை தாக்கி அழித்துள்ளது. இதனால் அங்கு நிகழவிருந்த அழிவுகள் தடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மேஜர் ஜெனரல் அகமது அசிரி, ஹவுத்தி இனப் போராளிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாகவும், அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து, இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது.
Saudi Arabia has allegedly intercepted a missile launched from Houthi-controlled territory in Yemen towards Islam's holiest city of Mecca.
இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்தின் மீது ஹவுத்தி இனப்போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.


Share:

அதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக்கண்டித்து மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு !!



இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் எதிர்வரும் (28-10-2016) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஜக அதிராம்பட்டினம் கிளை சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Share:

வடகிழக்கு பருவ மழை அக்டோப்ர் 30ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்



தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ல் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான மழையைத் தீர்மானிக்கும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது பற்றி வானிலை ஆய்வு மையம் கூறும்போது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ம் தேதியில் தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது” என்றார்.

மேலும் கியாண்ட் புயல் மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதையை நோக்கிச் செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அது கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றாலும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை தமிழக வடக்குக் கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 29-31-லும் கனமழை பெய்யலாம் என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம்.
Share:

பொதுசிவில் சட்டம் சாத்தியமில்லை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு !!!



128 கோடி மக்கள் தொகை, 200 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பொதுசிவில் சட்டம் சாத்தியமில்லை என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத், காந்தி நகரில் பாபு குஜராத் அறிவுசார் கிரா மத்தில் குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சங்கர் சிங் வகேலா நடத்திய மாணவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:- நமது பன்முகத்தன்மையை நீக்கவோ மற்றும் அதனை செயற்கையாக பொதுசிவில் சட்டமாக கொண்டுவரவோ முயற்சிக்க கூடாது. இது இந்தியாவின் பண்பாடல்ல. இந்தியாவில் இந்த பன்முகத் தன்மை பல நூற்றாண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1800 எழுத்து வடிவமற்ற மொழிகளும், அன்றாடம் பேசப்படும் 200 மொழிகளும் உள்ளன.
வாழ்க்கை, கலாச்சாரம், உடை முறைகளில் வேறுபாடு காணப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு சட்டம், ஒரே நாடு, ஒரே முறையின் கீழ் பின்பற்றப்பட்டு வருகின்றன. நமது கலாச்சார சுதந்திரம் காரணமாக இந்த பன்முகத் தன்மையை நம்மால் பின்பற்ற முடிகிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் சதித்திட்டத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பாஸிச அரசு, இந்திய சட்ட ஆணையத்திடம் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து, தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்படி கோரியுள்ளது.
சுதந்திர இந்திய வரலாற்றில் மத்திய அரசின் இந்திய விபரீதப் போக்கை முதன்முறையாக பா.ஜ.க அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் வாழும் சமயச் சார்பற்ற கொள்கையில் ஊறித் திளைத்தவர்களுக்கு மத்திய அரசின் இந்தப் போக்கு ஆச்சரியத்தையும், எரிச்சலையும்ஏற்படுத்தியது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்தில் மத்திய அரசின் இந்தப் போக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.
இந்திய சட்ட ஆணைத்திடம், பொதுசிவில் சட்டத்திற்கு பரிந்துரை செய்ய மத்திய அரசு கோரி யதை அறிந்தே குமுறிக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம், இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் பி.எஸ். சௌஹான் அவர்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியிட்ட 16 கேள்வி அடங்கிய கருத்துக் கேட்பு அறிவிப்பைப் பார்த்ததும், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்று கூறுவார்களே, அந்த நிலைக்கு முஸ்லிம் சமுதாய மனோநிலை ஏற்பட்டது.
இதை உணர்ந்த அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள கருத்தக் கேட்பு வினாக்களை முஸ்லிம் சமுதாயம் அறிவிப்பு செய்தது. நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பைப் புறக்கணித்து வருகி றார்கள்.
அதே சமயம், பொது சிவில் சட்டம் பற்றியும், ஷரீஅத் சட்டம் பற்றியும், குறிப்பாக ‘தலாக்’ விவகாரத்தைப் பற்றியும் இந்திய சட்ட ஆணையத்தின் கோரிக்கையை நிராகரிக்குமாறு அறிவித்திருக் கும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பற்றியும், இந்திய முஸ்லிம்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை ஒரு கையெழுத்து இயக்கம் மூலம் தெரிவிப்பதற்கு நாடு முழுவதிலும் இப்போது அந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கையெழுத்து படிவத்தில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய ஷரீஅத் கூறும் திருமணம், தலாக், குலா, பஸ்க், விராஸித் ஆகிய சட்டங்களில் எங்களுக்கு முழு திருப்தி இருக்கிறது. இவற்றில் எந்தவொரு திருத்தமும் செய்ய முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய அரசியல் சாசனம், எல்லா மதங்களைப் பின்பற்றுவோருக்கும், அவரவர் மதத்தைப் பின்பற்றி நடப்பதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆகவே, பொதுசிவில் சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.
ஷரீஅத் சட்டங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறு துணையாக இருப்போம்.இந்த கையெழுத்து இயக் கத்தில் கோடிக்கணக்கில் இந்திய முஸ்லிம்கள் கையெழுத்து இட்டு வருகிறார்கள்.
அதோடு, சமுதாயத்தின் கோபத்தையும் கொந்தளிப்பையும் அமைதிப் படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை முன்னின்று நடத்தும் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடுகள் மாநிலம் முழுவதிலும் நடந்து வருகின்றன.இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத எழுச்சிப் புயலைப் வளர்த்து வரும் பத்திரிகைகளும், ஊடகங் களும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் பற்றிய சாதக, பாதகமான பலப்பல கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தரும் பேட்டிகளும் நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share:

வங்கக் கடலில் 'கியான்ட்' புயல்: ஒடிஷா, வட ஆந்திர மீனவர்களுக்கு எச்சரிக்கை




வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'கியான்ட்' என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் 'கியான்ட்' தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். "மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு 'கியான்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது போர்ட் பிளேருக்கு வடக்கே - வட மேற்கே 620 கி.மீ., கோபால்பூருக்கு தென் கிழக்கே 710 கி.மீ, விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி நகரும். இருப்பினும், இந்தப் புயல் கரையை கடக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் எண் புயல் கூண்டு:
'கியான்ட்' புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், பாம்பன், நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களிலும் புதுச்சேரி துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Share:

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28-ம் தேதி ஊதியம் வழங்க முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தின் இறுதிநாள் அந்த மாதத்துக்கான ஊதியம், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலம் வங்கிக்கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மாதம் 29-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே, தீபாவளியை கொண்டாடும் வகையில், அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த கோரிக்கையை ஏற்று, இம்மாதம் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளே அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்த அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
Share:

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: திமுக தகவல்



திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share:

மரண அறிவிப்பு (ஜெகபர் சாதிக்)



அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.ரா.முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.முஹம்மது யாகூப் அவர்களின் மருமகனும், Y.அன்வர் அலி அவர்களின் மச்சானும், தீன் முஹம்மது அவர்களின் சகோதரரும், செய்யது புகாரி அவர்களின் மாமனாரும், மர்ஹூம் அஹமது ஹாஜா, M.R.முஹம்மது ஜலீல், எஸ்.அலாவுத்தீன், மர்ஹூம் தமீம், P.முகம்மது முஹைதீன் ஆகியோரின் சகலையுமாகிய ஜஹபர் சாதிக்  அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…
Share:

மரண அறிவிப்பு ( கே.எம் சரபுதீன் அவர்கள் )


அதிராம்பட்டினம், சாயக்காரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும், ஜாஃபர் சித்திக் அவர்களின் தகப்பனாரும், தமுமுக அதிரை பேரூர் துணைச்செயலர் தமீம் அன்சாரி அவர்களின் மச்சானும், ஒரத்தநாடு ஜமாஅத் தலைவர் கே.எம் சரபுதீன் அவர்கள்  நேற்று இரவு ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஒரத்தநாடு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Share:

அதிரையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

இஸ்லாமிய ஷரியத் சட்டம் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பொதுசிவில் சட்டம் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தக்வா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

                         


கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவ்லவி முஹம்மது இத்ரீஸ் அறிமுக உரை நிகழ்த்தினார்.


சிறப்பு அழைப்பாளராக சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ஷம்சுதீன் காசிமி கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வர முனைப்பு காட்டும் பொதுசிவில் சட்டம் குறித்து விழிப்புணர்வு விளக்க உரை நிகழ்த்தினார்.


தொடக்கத்தில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் இமாம் சஃபியுல்லா அன்வாரி, இஸ்லாமிய மார்க்க விளக்க பிரசாரகர் அப்துல்லா தவ்ஹீத் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, அதிரை தாருத் தவ்ஹீத் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1300 பேர் கலந்துகொண்டனர்.

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பொதுமக்களிடம் ஆதரவு கோரி படிவங்கள் வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமிய சட்டமுறைகளில் குறிப்பாக நிக்காஹ், தலாக், குலா, ஃபஸ்க், வராசத் ( வாரிசுரிமை ) குறித்த சட்டங்கள் எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு இந்திய அரசியல் சாசனம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. எனவே பொதுசிவில் சட்டத்தை  நாங்கள் எந்தவடிவத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், ஷரியத் சட்டங்களை பாதுகாக்க அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்துடன் முழுமையாக நிற்போம் என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இவற்றில் உடன்படுவதாக படிவத்தில் கையொப்பமிட்டு உறுதி செய்தனர்.

மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ஆதரவு கோரி கையொப்பம் பெற படிவங்களை பெற்றுச்சென்றனர்.



                                       

                                

                               

Share:

முஸ்லிம் பெண்களே உஷார்!

Image result for be careful
காவி சிந்தனை கொண்ட பெண்கள் குழு வீடுவீடாக சென்று தனியாக இருக்கும் முஸ்லிம் பெண்களிடம் ஆதார் கணக்கு எடுக்க வந்துள்ளதாக கூறி பெண்களின் ஆதார் அட்டையை மட்டும் படம்பிடித்து செல்வதாக தகவல் வந்து உள்ளது.
அதன் மூலம் பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய பெண்களே மனு அளித்தது போல் பொய்யான ஒன்றை தயார் செய்வதாக தகவல்
ஆகவே சகோதரர்களே /சகோதரிகளே மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பீர்.
Share:

காவிரி பிரச்சினை: ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சினை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10.30 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் காவிரி நதிநீர் தொடர்பான உயர்நிலை தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி நியமித்தல், அதற்காக அவசரச் சட்டம் இயற்றுதல், தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதல் கூட்டம்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு நிர்வாகம் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அரசுப் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்திருந்தார்.

முதல்வரின் பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற பிறகு அவரது தலைமையில் முதல்முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
Share:

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] அன்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தினமும் 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சியில் சராசரியாக பெண்கள் உட்பட 1000 பேர் முதல் 1500 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

கூட்டம் கடுமையாக காணப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இட பற்றாகுறையை சமாளிக்க ஜாவியா வரண்டாவில் அமரவைக்கப்பட்டனர். சிலர் நின்றுகொண்டு சொற்பொழிவை கேட்டனர். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் கடந்த வருடத்தை போல் அருகில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.

தொலை தூரத்திலிருந்து வருகை வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஜாவியா சாலையின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் மஜ்லீஸ் முடியும் வரை அப்பகுதி முழுதும் வாகன நெருக்கடியாக காணப்பட்டது.

அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை தவிர்த்துக்கொண்டனர். உணவு பொட்டலங்கள் பேக்கிங் மற்றும் விநியோகம், ஹதியா நிதி வசூல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டியினர் செய்தனர்.

Share:

அதிரை A.J ஜும்ஆ பள்ளியில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு காயிஃப் ஜனாஸா தொழுகை!

அதிரையை சேர்ந்த அப்துல்லாஹ் ஆலிம் 12/10/2016 அன்று இலங்கையில் அமைந்துள்ள காத்தான்குடியில் வபாத்தானார்கள்.
அவர்களுக்கு A.J ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு காஃயிப் ஜனாஸா தொழுகை நடைப்பெற்றது.
அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
Share:

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (அக்-15 ந் தேதி) நிறைவு: நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] அன்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.

நாளை காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன், 8 மணியளவில் துஆ ஓதி நிறைவுபெறும்.

இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Share:

அதிரையில் புதிய ஸ்டிக்கர் ஷோரும் உதயம்!

ம்

அதிரை சேர்மன் வாடி அருகில் புதியதாக ஸ்டிக்கர் ஷோரும் இன்று (5/10/2016) உதயமாகி உள்ளது.
அங்கு பைக் மற்றும் காருகளுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி தரப்படுகிறது. மேலும் நீங்கள் கேட்கின்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டு தரப்படும் என கூறுகிறார் இந்த கடையின் உரிமையாளர்.
முகவரி
CLOUD VERSION,
MANNAPAM KULAM அருகில்,
சேர்மன் வாடி,
அதிராம்பட்டினம்.
தொலைப்பேசி எண்: 9942588116.

தயம்!

Share:

உள்ளாட்சித் தேர்தல் ரத்து: திமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்.


தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. அதேபோல் தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனு தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சுவாமி ஆஜரானார். கடந்த 2006, 2011-ம் ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகளையே பின்பற்றியதாகக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்திருந்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாக நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலே ஆணிவேர்..

"தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும்.
புதிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்துக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி செயல்படுத்த வேண்டும். பணம் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது."
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தெரிவித்தார்.
Share:

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிகிச்சையை அடுத்து முதல்வர் குணமடைந்து வருகிறார். முதல்வருக்கான சிகிச்சையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

காலித் மரைக்கா விற்கு கிடைத்த வெற்றி!!



ஹாலிக் மரைக்கா அவர்களுடைய கடித போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அல்ஹம்துலில்லாஹ் கடந்த வாரம் புதுமனைத்தெருவில் உள்ள மின்கம்பமும், இன்று சுரைக்காக்கொள்ளையில் உள்ள மின்கம்பமும் மாற்றப்பட்டுள்ளது.தனது கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரியை நேரில் சந்தித்து நன்றியும் சொல்லியுள்ளார். அல்லாஹ் ஹாலிக் மரைக்கா அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை இன்னும் அதிகபடுத்தி அவர்களுடைய சேவைகளை பொருந்திக்கொள்வானாக. ஆமின்...




Share:

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 125 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

கடந்த 29 ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறுவது தொடங்கியது முதல் நாள் வியாழக்கிழமை அன்று 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் அளித்தனர். அதன்பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திமுகவினர் 14 வார்டுகளுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினர் 4 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 31 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர். வேட்பு மனுக்கள் அளிப்பது கடைசி நாளான இன்று திங்கட்கிழமை அதிமுகவினர் 21 வார்டுகளுக்கும், எஸ்டிபிஐ கட்சியினர் 5 வார்டுகளுக்கும், மஜக 1 வார்டுக்கும், பிஜேபி கட்சியினர் 3 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 86 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர்.

இதுவரையில் மொத்தம் 125 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர். வேட்புமனுக்கள் நாளை 4ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. 6 ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். 
Share:

அதிரை 9வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் முகைதீன்!

அதிரை பேரூராட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளநிலையில் 9வது வார்டில் சுயேட்சையாக முகம்மது ராவுத்தர் அவர்களின் மகன் முகம்மது முகைதீன் அவர்கள் போட்டியிட உள்ளார். 
Share:

அதிரையில் தி.மு.க வின் (DMK) 14 வார்டு கவுன்சிலர் வேட்பாளராக முஹம்மது ஷரீப் திடீர் மாற்றம்!

அதிரை 14 வார்டு நடுத்தெரு பகுதிக்கு திமுக சார்பில் பெண் வேட்பாளர் இஸ்மாயில் நாச்சியா (NKS ஷரீப் மனைவி )என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் மாற்றமாக சிட்டிங் மெம்பெர் NKS ஷரீப் தானே வார்டு மெம்பெர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவிப்பு செய்து உள்ளார்.மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share:

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பாக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு




அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் பேரூர் செயளாலர் செல்ல ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.

 வேட்பாளர்கள் பின்ரும் நபர்கள்.
ஹபீப் நாச்சியா (வயது25) க/பெ. அப்துல் ரஹ்மான், வார்டு எண் – 11
அப்துல் ஜப்பார் (வயது 37) த/பெ. துல் கருணை, வார்டு எண் – 2
இவர்கள் இருவரும் எதிர்வரும் (03/10/2016) திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
Share:

எல்லையில் தயார் நிலையில் படைகள்: ராணுவ தளபதி ஆய்வு

ராணுவத் தளபதி தல்பீர் சிங் | கோப்புப் படம்.
ராணுவத் தளபதி தல்பீர் சிங்
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் உள்ள வடக்கு கமாண்ட் பிரிவு தலைமையகத்தில் ராணுவத் தளபதி தல்பீர் சிங் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
எல்லையில் ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் எழுமோ என அச்ச சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ராணுவத் தளபதி தல்பீர் சிங் உத்தம்பூர் வடக்கு கமாண்ட் பிரிவு தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
எல்லையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். படைகள் ஆயத்த நிலை குறித்து கேட்டறிந்தார்.
எல்லையில் ராணுவ துல்லிய தாக்குதலை வடக்கு கமாண்ட் பிரிவே நடத்தியது. தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
வடக்கு கமாண்ட் பிரிவு ஆய்வை முடித்துக் கொண்டு அவர் மேற்கு கமாண்ட் படைப் பிரிவையும் ஆய்வு செய்யவிருக்கிறார்.
Share:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு: வீரர்கள் குவிப்பு

எல்லையில் போர் பதற்றம் நீடிப்பதால் காஷ்மீர் மாநிலம் அக்நூர் எல்லைப் பகுதிக்கு விரையும் ராணுவ வீரர்கள் | படம்: பிடிஐ

4 லட்சம் பேர் வெளியேற்றம்; உஷார் நிலையில் முப்படைகள்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர், பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தரைப்படை, விமானப்படை, கடற்படைத் தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின் றனர்.
கடந்த 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நேற்றுமுன்தினம் அதிரடியாக புகுந்த இந்திய வீரர்கள், 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப் பகுதி களில் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது பீரங்கி தாக்குதல் களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த நாட்டு ராணுவ உயரதி காரிகளுடன் பல்வேறு கட்டமாக ஆலோ சனை நடத்தி வருகிறார்.
அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், அணுஆயுதங்களை அலமாரியில் வைத்திருப்பதற்காக நாங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் மீது போரை திணித்தால் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 6 மைல் தொலைவுக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் பாது காப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் 6 மாவட்டங்கள் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ளன. அந்த மாவட்டங்களில் எல்லைக்கோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்காக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
வீடு, வயல், தோட்டம், கால்நடை போன்றவற்றை விட்டு திடீரென வெளியேறுவது கடினமாக இருந்தாலும் பாசில்கா, குர்தாஸ்பூர் பகுதி மக்கள் ராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் கோஷங்களை முழங்கியபடி வெளியேறுகின்றனர்.
போர் பதற்றம் காரணமாக எல்லையோர கிராமங்களில் ஏடிஎம் மையங் களில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சாலை களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
பஞ்சாபில் சண்டிகர், அம்பாலா, பதிண்டா, ஆதம்பூர், ஹல்வாரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் மட்டுமன்றி பக்ரா அணை, எண் ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
காஷ்மீர், பஞ்சாப் மட்டுமன்றி ராஜஸ் தான், குஜராத் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சர்வதேச எல்லை யில் பெருமளவில் குவிக்கப்பட்டுள் ளனர்.
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள ராணுவ முகாம்கள், விமானப் படைத் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படைத் தளங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜ்நாத் ஆலோசனை
எல்லை பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி மற்றும் பாதுகாப்பு, உளவுத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற் றனர்.
பெருநகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத் தல்கள் இருப்பதால் அடுத்த 30 நாட்களுக்கு மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். நாடு முழுவதும் விமான நிலையங்கள், துறை முகங்கள், சுற்றுலா தலங்களில் பாது காப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
வீரரை மீட்க நடவடிக்கை
பாகிஸ்தான் எல்லையில் நுழைந்ததாக இந்திய ராணுவ வீரர் சாந்து பாபுலால் சவுகான் என்பவரை அந்த நாட்டு ராணு வத்தினர் நேற்றுமுன்தினம் பிடித்துச் சென்றுள்ளனர்.
‘அவர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க வில்லை, காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளார்’ என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook