தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] அன்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நாளை [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.
நாளை காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன், 8 மணியளவில் துஆ ஓதி நிறைவுபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.
நாளை காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன், 8 மணியளவில் துஆ ஓதி நிறைவுபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment