அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] அன்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று [ 15-10-2016 ] சனிக்கிழமை காலை இதன் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தினமும் 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சியில் சராசரியாக பெண்கள் உட்பட 1000 பேர் முதல் 1500 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
கூட்டம் கடுமையாக காணப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இட பற்றாகுறையை சமாளிக்க ஜாவியா வரண்டாவில் அமரவைக்கப்பட்டனர். சிலர் நின்றுகொண்டு சொற்பொழிவை கேட்டனர். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் கடந்த வருடத்தை போல் அருகில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.
தொலை தூரத்திலிருந்து வருகை வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஜாவியா சாலையின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் மஜ்லீஸ் முடியும் வரை அப்பகுதி முழுதும் வாகன நெருக்கடியாக காணப்பட்டது.
அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை தவிர்த்துக்கொண்டனர். உணவு பொட்டலங்கள் பேக்கிங் மற்றும் விநியோகம், ஹதியா நிதி வசூல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டியினர் செய்தனர்.
No comments:
Post a Comment