ராணுவத் தளபதி தல்பீர் சிங் |
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் உள்ள வடக்கு கமாண்ட் பிரிவு தலைமையகத்தில் ராணுவத் தளபதி தல்பீர் சிங் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
எல்லையில் ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் எழுமோ என அச்ச சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ராணுவத் தளபதி தல்பீர் சிங் உத்தம்பூர் வடக்கு கமாண்ட் பிரிவு தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
எல்லையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். படைகள் ஆயத்த நிலை குறித்து கேட்டறிந்தார்.
எல்லையில் ராணுவ துல்லிய தாக்குதலை வடக்கு கமாண்ட் பிரிவே நடத்தியது. தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
வடக்கு கமாண்ட் பிரிவு ஆய்வை முடித்துக் கொண்டு அவர் மேற்கு கமாண்ட் படைப் பிரிவையும் ஆய்வு செய்யவிருக்கிறார்.
No comments:
Post a Comment