தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ல் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மழையைத் தீர்மானிக்கும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது பற்றி வானிலை ஆய்வு மையம் கூறும்போது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ம் தேதியில் தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது” என்றார்.
மேலும் கியாண்ட் புயல் மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதையை நோக்கிச் செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அது கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றாலும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை தமிழக வடக்குக் கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 29-31-லும் கனமழை பெய்யலாம் என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம்.
No comments:
Post a Comment