வங்கிகள் திணறல்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களின் பண மதிப்பு நீக்கப்பட்ட தாக மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றி புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய நோட்டுகள் போதிய அளவு அச்சடிக்கப்படாததால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இத னால் மக்களுக்கு தேவையான பணத்தை வழங்கமுடியாமல் வங்கி கள் திணறின.
இந்நிலையில், 4-வது சனிக் கிழமையான நேற்றும், ஞாயிற்றுக் கிழமையான இன்றும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாட்களாகும். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம்களும் பணமின்றி முடங்கின. சென்னையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில ஏடிஎம்களில் மட்டுமே நேற்று பணம் கிடைத்தன. அதுவும் காலையில் சென்றவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
பணம் கிடைத்த ஏடிஎம்களிலும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அந்தப் பணத்தை எடுத்தவர்களும் சில்லறை கிடைக்காமல் தவித் தனர்.
இதுகுறித்து, பாரிமுனை சேர்ந்த குமார் என்பர் கூறும்போது, “பெரும்பாலான வங்கி ஏடிஎம்களில் இன்று (நேற்று) பணம் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள 20 வங்கி ஏடிஎம்களில் 2 வங்கி ஏடிஎம்மில்தான் பணம் கிடைத் தது. அதுவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே கிடைத்ததால் அதை மாற்ற முடியவில்லை” என்றார்.
No comments:
Post a Comment