புதிய 2000 ரூபாய் நோட்டு |
ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது என இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு பல மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்தாலும் இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதிக மதிப்பு கொண்ட பணத்தைத் திரும்பப் பெறுவது என பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எடுத்த முடிவு போல இதுவும் ரகசியம் காக்கப்பட்டு வந்தது. அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரிந்திருந்தது.
என்றாலும் புதிய ரூ.2000 நோட்டு வெளிவரப்போவது குறித்த தகவல் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளிவரத் தொடங்கியது. சில தகவல்களில் இதுதான் அந்த ரூ2000 நோட்டு என்ற படமும் வெளியானது.
இதுகுறித்து நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “அச்சகத்தில் இருந்து விநி யோகத்துக்காக ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களுக்கு இந்த நோட்டு எடுத்துச் செல்லப்படும்போது, யாரோ ஒருவர் இதை படம் பிடித் திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் முடிவு குறித்து யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ரூ.2000 நோட்டு வெளியாகும் தகவல் மற்றும் அதன் வடிவமைப்பு கசிந்தது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம்” என்றார்.
புதிய 2000 ரூபாய் நோட்டு வரிசை மகாத்மா காந்தி வரிசை என அழைக்கப்படுகிறது. பார்வையற்றவர்கள் இதன் மதிப்பை எளிதாக அறியும் வகையில் ஓரத்தில் பிரெய்லி கோடுகளைக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment