வங்கிகள் வேலை நேரத்தை இரவு 8 மணி வரையில் நீட்டிகிறது, ஏ.டி.எம். சேவை கட்டணம் கிடையாது என சில வங்கிகள் அறிவிப்பு

மும்பை,



வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரலாம் என்ற அச்சத்தில் அதிகமான வங்கிகள் பெரும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. வங்கிகளின் வேலை நேரத்தை இரவு 8 மணிவரையில் நீடிப்பதாக அறிவித்து உள்ளன.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்ததால் மக்கள் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களது சிரமங்களைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. அனைத்து ஏ.டி.எம். மையங்களும் வெள்ளிக்கிழமை(நாளை) திறக்கப்படாது. 500, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவி எண்கள் அறிவித்து உள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ள ரிசர்வ் வங்கி, சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும் என்று அறிவித்து உள்ளது. 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் வேலை நேரத்தை அதிகரித்து உள்ளது. வங்கியின் வேலை நேரம் மாலை 6 மணிவரையில் நீடிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக தனி கவுண்டர் செயல்படும் என்று தெரிவித்து உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஒ சந்தா கோச்சார் பேசுகையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அனைத்து கிளைகளும் இரவு 8 மணி வரையில் செயல்படும் என்றார். மின்னணு முறையிலான பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தலிலும் சலுகைகளை வங்கி அறிவித்து உள்ளது.

ஒருவர் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான அனைத்து சேவை கட்டணங்களும் நவம்பர் 30-ம் தேதி வரையில் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏ.டி.எம். மூலமான பண பரிமாற்றத்திற்கான கட்டணம் டிசம்பர் 31-ம் தேதிவரையில் ரத்து செய்யப்படுகிறது என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிவித்து உள்ளது. டெபிட் கார்டுகள், ஆன்-லைன் பண பரிமாற்றத்திற்கான வரம்பையும் உயர்த்திஉள்ளது. இது போன்று ஆக்ஸிஸ் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து உள்ளது, பணம் கையாளும் கட்டணங்களை தள்ளுபடி செய்தது. ஏ.டி.எம். கார்டு மூலமாக பண பரிமாற்றத்திற்கான வரம்பையும் உயர்த்தி உள்ளது. 

வங்கியின் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று வங்கியின் தலைவர் ராஜீவ் ஆனந்த் கூறிஉள்ளார். வாடிக்கையாளர்கள் இவ்விவகாரத்தில் பீதிக்கு உள்ளாக தேவையில்லை என்று கூறிஉள்ள ஆனந்த், வாடிக்கையாளர்கள் மொத்தமாக கிளைகள் வருகை தருவதை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்து உள்ளார், அவர் நோட்டுகளை மாற்றிக் கொள்ள 50 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். 
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook