எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்- காப்பி அடிப்பதை தடுக்க 6,403 பறக்கும் படைகள்


தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக் கூடங்களில் காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர், மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். பள்ளி மாணவர்கள் தவிர 39,741 தனித்தேர்வர்கள், 224 சிறைக் கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாவட் டத்தில் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ, மாணவிகள் 209 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 9.15 முதல் 12 மணி வரை
தினமும் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 9.15 மணிக்கு வினாத்தாள் தரப்பட்டு, அதை படித்துப் பார்க்க 10 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். 9.25 முதல் 9.30 வரை வினாத்தாள், விடைத்தாள் விவரங்களை மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவடையும்.
எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மொத்தம் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் நீங்கலாக, ஒவ்வொரு மாவட் டத்திலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனை மேற்கொள்வார்கள்.
இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள்
தேர்வுக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் நேற்று அனைத்து தேர்வு மையங்களி லும் மும்முரமாக மேற்கொள் ளப்பட்டன. தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் வகையில் மேஜைகளில் அவர்களது பதிவெண்களை எழுதுவது, ஒவ்வொரு அறை யிலும் தேர்வு எழுதும் மாண வர்களின் பதிவெண் விவரங்களை எழுதுவது போன்ற பணிகளில் தேர்வுத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தேர்வுப் பணியை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட் டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தேர்வு மையங் களுக்கு சென்று பார்வை யிட்டனர்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook