டெல்லி : தனியார் வங்கிகள் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை கடுமையாக உயர்த்திவிட்ட நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொகையாக பெருநகரங்களில் 5 ஆயிரம் ரூபாய், இதர நகரங்களில் 3 ஆயிரம் ரூபாய், சிறிய நகரங்களில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப்புறங்களில் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் வங்கிக்கிளைகளில் பணபரிவர்த்தனை செய்தால், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment