ரேஷனில் வழங்க, மாதந்தோறும், 13 ஆயிரத்து, 500 டன் துவரம் பருப்பு; 7,000 டன் உளுத்தம் பருப்பு தேவை. தற்போது, துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது.
அரசியல் குறுக்கீடுகளால், சந்தையை விட, அதிக விலைக்கு பருப்பு வாங்கப்பட்டது.
இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட தால், சிறப்பு வினியோக திட்டத்தை நிறுத்த, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ரேஷனில் பருப்பு கிடைக்காத அதிருப்தியில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 199 கோடிரூபாய்க்கு, 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வாங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் டில், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உளுத்தம் பருப்பு சப்ளை நிறுத் தப்படுவதால், மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
ரேஷனில் பருப்பு கிடைக்காத அதிருப்தியில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 199 கோடிரூபாய்க்கு, 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வாங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் டில், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உளுத்தம் பருப்பு சப்ளை நிறுத் தப்படுவதால், மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிறப்பு திட்ட காலக்கெடு, 2016 டிசம்பரில் முடிந்தது; நிதி பற்றாக்குறையால், அத்திட்டம் நீட்டிக்கப்பட வில்லை. அந்த விபரத்தை, மக்களுக்கு முறைப்படி தெரிவிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. இதனால், மீண்டும் திட்டத்தை செயல்படுத்தவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
உயரதிகாரிகள், நீட்டிப்பு குறித்த அரசாணையை, மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். அதில் உள்ள விபரம், முக்கிய பொறுப்பில் உள்ள, பல அதிகாரி களுக்கே தெரியவில்லை. போராட்டத்தை தவிர்க்க,
அவசர தீர்வாக, முதலில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலாம்; பட்ஜெட்டில், சிறப்பு பொது வினியோக திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான பின், உளுத்தம் பருப்பு வாங்கலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், பட்ஜெட்டில், 'சிறப்பு வினியோக திட்டம் குறித்த அறிவிப்பில், உளுத்தம் பருப்பு இடம் பெறவில்லை. அதனால், இனி, ரேஷன் கடைகளில், உளுத்தம் பருப்பு வழங்கப்படாது. அது தெரியாமல், மக்கள், உளுத்தம் பருப்பு கேட்டு பிரச்னை செய்வர். எனவே, உளுத்தம் பருப்பு வழங்கப்படும் என்றால்,அந்த விபரத்தை, அரசு உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், பட்ஜெட்டில், 'சிறப்பு வினியோக திட்டம் குறித்த அறிவிப்பில், உளுத்தம் பருப்பு இடம் பெறவில்லை. அதனால், இனி, ரேஷன் கடைகளில், உளுத்தம் பருப்பு வழங்கப்படாது. அது தெரியாமல், மக்கள், உளுத்தம் பருப்பு கேட்டு பிரச்னை செய்வர். எனவே, உளுத்தம் பருப்பு வழங்கப்படும் என்றால்,அந்த விபரத்தை, அரசு உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment