இடைத்தேர்தலில் பலமுனை போட்டிக்கு வாய்ப்பு: ஆர்.கே.நகரில் களமிறங்கப் போவது யார், யார்? - தமிழக அரசியலில் தொடங்கியது பரபரப்பு

பலமுனைப் போட்டிக்கு வாய்ப் புள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் களமிறங்கப் போவது யார், யார் என்ற பரபரப்பு தொடங்கி யுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் செயல்பட்டு வருகின்றன. ‘எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் சசிகலா தலைமையிலான அதிமுகவைவிட அதிக வாக்குகளை பெறாவிட்டால் ஓபிஎஸ், தீபாவின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும். அதேபோல ஓபிஎஸ், தீபாவைவிட குறைவாக வாக்குகளை பெற்றால் சசிகலா தரப்பினர் கடும் நெருக் கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சசிகலா, ஓபிஎஸ், தீபா என மூவருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு சோதனைக் களமாக அமைந்துள்ளது.
ஆர்.கே.நகரில் வென்றால் ஜெய லலிதா மரணம் தொடர்பாக எழுப்பப் படும் சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் முடிவுக்கு வரும் என சசிகலா தரப்பினர் நினைக்கின்றனர். எனவே, ஒரு வலு வான வேட்பாளரை நிறுத்துவது குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோ சித்து வருவதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரனே இங்கு போட்டி யிடக் கூடும் என அதிமுக வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. அதே நேரத் தில் மாற்று ஏற்பாடாக முன்னாள் அமைச்சர்கள் பி.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா பெயர்களும் பரி சீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன், வட சென்னை நிர்வாகி ராஜேஷ் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா தரப்பிலும் திமுகவிலும் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தங்கள் தரப்பிலும் பெண் வேட்பா ளரை நிறுத்த ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாக அவரது ஆதரவாளர் ஒரு வர் 'தி இந்து'விடம் தெரிவித்தார்.
திமுக சார்பில் மீண்டும் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடவே அதிகம் வாய்ப்பிருப்பதாக அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச் சினையால் திமுகவுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் சட்டத்துறை செய லாளர் இரா.கிரிராஜன், இளைஞ ரணி துணைச் செயலாளர் ஆர்.டி. சேகர் என பலரும் வாய்ப்பு கேட் டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந் திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத் தைகள் கட்சி அடங்கிய மக்கள் நலக் கூட்டணி, பாஜக சார்பில் வேட் பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்புள் ளது. தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாக தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி உறுதி யாகியுள்ளது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook