ஜியோ பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... பிரைம் ஜியோ திட்டத்தில் கூடுதல் டேட்டா!



முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில் மார்ச் 31-க்கு பிறகு, பிரைம் ஜியோ திட்டங்கள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. ஜியோவின் இந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள் விலை குறைந்த 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை வாங்கினர். இந்நிலையில் இலவச சேவைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் கட்டண திட்டங்களை (டாரிஃப் ரேட்ஸ்) அறிவித்தது.
ரூ.99-க்கு ரீசார்ஜ் 
ஏற்கெனவே ஜியோ கட்டண திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பிரைம் எனும் புதிய திட்டத்தை சில தினங்களுக்கு முன் ஜியோ அறிவித்தது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா
ஜியோ பிரைம் திட்டத்தை பதிவு செய்ததும் மாத ரீசார்ஜ் அடிப்படையில் ஜியோ திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்நிலையில் ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.
முதல் மாதத்துக்கு மட்டுமே 
ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய மார்ச் 31, 2017 கடைசி தேதியாகும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா மூலம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவை கடந்த பின் இன்டர்நெட் வேகம் குறையாது. எனினும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
56 ஜிபி டேட்டா 
இதே போல் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
பிரைம் ஜியோவில் என்னென்ன? 
முதலில் ரூ.303-க்கு ஜியோ பிரைம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் ஜியோ புத்தாண்டு சலுகையை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அந்த வகையில் தினமும் 1ஜிபி வரை அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச சேவைகளால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook