தமிழக அரசின் புதிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மதுரை பாலமேடுவில் 2010- ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு. | கோப்புப் படம். | எஸ்.ஜேம்ஸ்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் புதிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்திய விலங்கு நல வாரியம், கம்பாஷன் அன் லிமிடெட் பிளஸ் ஆக்‌ஷன் மற்றும் விலங்கு நல உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். 

மேலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்து ஜனவரி 7, 2016-ல் வெளியிட்ட அறிவிப்பாணையையும் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

எனினும் தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக என்.ஜி.ஓ.க்கள் 2 வாரங்களுக்குள் புதிய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

இருப்பினும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்பப் பெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்குகள் செல்லாதவையாகிறது என்று கூறினார். 

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பராசரன் கூறும்போது, தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் எனவும், இதனால் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவித்தார். 

விசாரணையின் போது ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்தவை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக, இந்திய மிருக வதை தடுப்புச் சட்டம்-1960-ல் திருத்தம் மேற்கொண்டு கடந்த 23-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் இல்லாத வகையில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டன. இச்சட்டம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 

இதனிடையே, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. கம்பாசன் அன்லிமிடெட் அண்டு ஆக்ஷன் (சியுபிஏ) என்ற அமைப்பும் வேறு சில பிராணிகள் நல ஆர்வலர்களும் தமிழக சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.
அதேவேளையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, கடந்த 7.1.2016-ல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டதற்கான மனுவை தாக்கல் செய்திருந்தார். 

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இவ்வழக்கில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 'மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டப்பேரவை சட்டம் நிறைவேற்றியிருப்பது சட்டப்பேரவை யின் உரிமை. இதை கேள்வி கேட்க முடியாது. மேலும், மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றும் செயல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி சர்மா...

இதனிடையே, இந்திய பிராணிகள் நல வாரியம் சார்பில், வாரியத்தின் ஒப்புதல் பெறாமல் தமிழக சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று நல வாரியத்தின் செயலர் எம்.ரவிக்குமார் அதன் வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை அஞ்சலி சர்மா மறுத்துவிட்டார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டபோதே, அதை எதிர்த்து இந்திய பிராணிகள் நல வாரியம் வழக்கு தொடர ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு சட்டத்திற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வாரியத்தின் செயலர் ஒப்புதல் வழங்கி எனக்கு இ-மெயில் மூலம் கடந்த 24-ம் தேதி அனுமதி அளித்துள்ளார். .

இந்த மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே வாரியம் அளித்துள்ள ஒப்புதலே போதுமானது. அதே உறுப்பினர்கள்தான் இப்போதும் உள்ளனர். தலைவர் மட்டும் தான் மாறியுள்ளார். மேலும், வாரியத்தில் நானும் ஓர் உறுப்பினர். வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தவிர, இந்த வழக்கில் நான் தனிப்பட்ட முறையில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அந்த அடிப்படையில் நான் புதிதாக மனு தாக்கல் செய்ய எந்த தடையும் இல்லை. எனவே, பிராணிகள் நல வாரிய செயலரின் உத்தரவு என்னை சட்டரீதியாக கட்டுப்படுத்தாது என்று அஞ்சலி சர்மா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Share:

ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. "கரண்ட் அக்கவுண்ட்"டுக்கு மட்டும்! : ஆர்பிஐ அறிவிப்பு


வங்கி நடப்புக் கணக்கிலிருந்து ஏடிம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வங்கி நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மற்றும் வங்கி நடப்புக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஏடிஎம்-களிலிருந்து நடப்பு கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.10,000ஆக இருந்தது, தற்போது இந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வாரம் ரூ.24,000 எடுக்கும் கட்டுப்பாட்டில் மாற்றமில்லை. 

“சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இப்போதைக்கு நீடிக்கும், இந்தக் கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்ப்பு நீக்கத்திற்கு முன்பு இருந்தது போல் வங்கிகள் தங்கள் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான தங்கள் சொந்த உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
Share:

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் தடை !

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (ஜன. 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இது பற்றி மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது, நாளை செவ்வாய்கிழமை மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சார பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Share:

2வது டி20: கடைசி பந்து வரை த்ரில்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா



இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளில் தலா ஒரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இங்கிலாந்து அணியில் பிளங்கெட் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் டவ்சன் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு மற்றொரு சுழல் பவுலரான, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்காக கேப்டன் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 15 பந்தில் 21 ரன்கள் சேர்த்த கோஹ்லி, ஜோர்டான் பந்து வீச்சில் டவ்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேநேரம், இங்கிலாந்துக்கு எதிரான, ஒருநாள் தொடர் மற்றும் முதல் டி20 போட்டியில் மோசமாக ஆடிய லோகோஷ் ராகுல் நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த ரெய்னா 10 பந்தில் 7 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 12 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். யுவராஜ் சிங் அவுட்டாகும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. 4வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். மணீஷ் பாண்டே ஆமை வேக ஆட்டம் ஆடினார். எனவே லோகேஷ் ராகுல் கியரை மாற்றி அதிரடி ஆரம்பித்தார். ராகுல் 32 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 13.4 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது. 18வது ஓவரில் ஜோர்டான் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அவர் 47 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 56 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு கை கொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்திய தரப்பில் ராகுல் அதிகபட்சமாக 71 ரன்கள் விளாசினார். மனிஷ் பாண்டே 30 ரன்களும் எடுத்தனர். டோணி 5 ரன்களிலும், யுவராஜ் 4 ரன்களிலும் நடையை கட்டி அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள்தான் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. ஆனால் பும்ரா அருமையாக பந்து வீசி வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்திய பும்ரா, 2வது பந்தில் மொயின் அலிக்கு 1 ரன் கொடுத்தார். 3வது பந்தை சந்தித்த பட்லரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தில் பட்லரை பௌல்ட் செய்தார் பும்ரா. இதனால் கடைசி 2 பந்துகளில் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை ஜோர்டான் சந்திக்க அதில், 1 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சந்தித்த மொயீன் அலியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. எனவே இந்த குறைந்த ஸ்கோர் கொண்ட த்ரில் மேட்சில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது.



அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் நெஹ்ரா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Share:

முஸ்லீம்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் மசூதிக்கு தீ வைப்பு

விக்டோரியா: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகரில் உள்ள மசூதிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் யாரோ தீ வைத்துள்ளனர். மசூதியில் இருந்து புகை வருவதை பார்த்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


Share:

மீண்டும் இளைஞர்கள் திரளப் போவதாக தகவல்: மெரினாவில் பிப். 12 வரை 144 தடை உத்தரவு

மெரினா கடற்கரை | படம்: ம.பிரபு

ஜல்லிக்கட்டுபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர்.
தமிழக அரசு சார்பில் ஜல்லிக் கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப் பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் வலியுறுத்தினர். ஒரு சிலர் போராட் டத்தை கைவிட மறுத்ததால் அவர் களை போலீஸார் வலுக்கட்டாய மாக வெளியேற்ற முயன்றனர்.
இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. நடுக்குப்பம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் பெட் ரோல் குண்டு, பாட்டில், கல்வீச்சு, தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. போராட்டக் களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கல வரம் செய்ததாக மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித் தார். மோதலில் 142 போலீஸார் காயம் அடைந்தனர். 117 வாக னங்களும் சேதப்படுத்தப்பட்டன.
பாதிப்புக்கு உள்ளான நடுக்குப் பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச் சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட் டுக்கான போராட்டம் போன்று பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மீண்டும் போராட வருமாறு இளைஞர்கள், மாணவர்களுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட இளை ஞர்கள், மாணவர்கள் மெரினா அல்லது பெசன்ட் நகரில் ஞாயிற் றுக்கிழமை (இன்று) திரளப் போவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணை யர்கள் சங்கர், சேஷசாயி ஆகி யோர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மயிலாப்பூர், ஐஸ் அவுஸ், பட்டினப்பாக்கம், திருவல் லிக்கேணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், பேரணி, மனித சங்கிலி, தேவை இல்லாமல் கூடுதல், அணுமதி இல்லாமல் கூடுதல் போன்ற அனைத்துக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு உடனடி யாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும். குடும்பமாக செல்லவோ, நடை பயிற்சி மேற்கொள்ளவோ எந்தத் தடையும் இல்லை.இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக போலீஸார் மீது நடத் தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோக்களை அவர்கள் வெளியிட்டனர்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து மெரினா நேப்பியர் பாலம் வரை நேற்று மாலையில் இருந்தே போலீ ஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெசன்ட் நகர் கடற்கரை பகுதியி லும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற் கரையில் நின்று பேசிக்கொண்டி ருந்த சில மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்
Share:

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மழை தொடரும்


கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது கன்னியாகுமரி அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு திசையில் நகர்வதால், அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Share:

ஜல்லிக்கட்டு வன்முறை: நீதி விசாரணை கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு | படம்: ம.பிரபு.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் தாக்குதல் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்துப் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ''ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பியது சமூக விரோத கும்பல். காவல்துறை குறைந்த பட்ச பலத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்'' விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் டெல்லி சென்று முழு மூச்சாக நின்று நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது, அதை நான் வரவேற்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன?'' என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் தாக்குதல் குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கை குறித்து முதல்வர் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தன் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடன் வெளிநடப்பு செய்தனர்.
Share:

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி:

கான்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் பந்தை சிக்ஸருக்கு விளாசும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் | படம்:ராய்ட்டடர்ஸ்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக மொயின் அலி தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத் தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி யின் கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இளம் அதிரடி வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மாறாக கேப்டன் விராட் கோலியே கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். ராகுலின் மோசமான பார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல், கிறிஸ் ஜோர்டான் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் அடில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 4.3 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். பவர் பிளேவில் இந்திய அணி 47 ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 55 ஆக இருந்த போது கோலி, மொயின் அலி பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற மோர்கனின் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு வந்த யுவராஜ் சிங் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்து பிளங்கெட் பந்தில் நடையை கட்டினார். சிறிது நேரத்தில் ரெய்னா 34 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார். அவர் 23 பந்துகளில், ஒரு சிக்‌ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை சேர்த்தார்.
அப்போது ஸ்கோர் 12.3 ஓவர்களில் 95 ஆக இருந்தது. இதன் பின்னர் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. மணீஷ் பாண்டே 3, ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் பொறுப்பில்லாமல் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். பர்வேஸ் ரசூல் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
கடைசி கட்டத்தில் தோனி, 27 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி இரு விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 148 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி பேட் செய்தது. ஜேசன் ராய், ஷேம் பில்லிங்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. 3 ஓவர்களில் இந்த ஜோடி 36 ரன்கள் விளாசியது. பும்ரா வீசிய 2-வது ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டது.
4-வது ஓவரில் யுவேந்திரா சாஹல் இரு விக்கெட்களை வீழ்த்தி சற்று நம்பிக்கை அளித்தார். அவரது முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஜேசன் ராய் அடுத்த பந்தில் போல்டானார். அவர் 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஷேம் பில்லிங்ஸூம் போல்டானார். அவர் 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்த கேப்டன் மோர்கன் நிதானமாக விளையாடி னார். இந்த ஜோடியின் பொறுப் பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 12.3 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. வெற்றியை நெருங்கிய நிலையில் 38 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 51 ரன்கள் விளாசிய நிலையில் ரசூல் பந்தில், மோர்கன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களறிமிறங்கிய ஸ்டோக்ஸூடன் ஜோ ரூட் அசத்தலாக விளையாட 18.1 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஜோ ரூட் 46, ஸ்டோக்ஸ் 2 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி தேர்வானார். அவர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 2 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி வரும் 29-ம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது.
Share:

மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலம்: முதல்வர் ஓபிஎஸ் கொடியேற்றினார்- விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்.
சென்னை மெரினாவில் கோலாகல மாக நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
இந்தியாவின் 68-வது குடி யரசு தினம், நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாக கொண் டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதல் முறையாக..
வழக்கமாக குடியரசு தினத் தன்று ஆளுநர்தான் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றார். இதனால், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வரே கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவுக்காக, காந்தி சிலை அருகே பிரம்மாண்டமான மேடை போடப்பட்டிருந்தது. அதன் எதிரே தற்காலிக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. விழா வைக் காண காலை 6 மணி முதலே ஏராளமானோர் கடற்கரை சாலையில் திரண்டிருந்தனர். நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக சாலையின் இருபுறமும் சவுக்குக் கட்டைகளால் தடுப்பு அமைத்திருந்தனர்.
காலை 7.50 மணிக்கு காவல் துறையினர் இருசக்கர வாகன அணிவகுப்புடன் முதல்வரை அழைத்து வந்தனர். முதலில் காமராஜர் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மாணவ, மாணவி கள், பொதுமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்தார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வரை, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தென்னிந்திய தலைமைப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த், கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் அலோக் பட்னாகர், ஏர் கமோடர் எஸ்.நிவாஸ், கடலோர காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ரா, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரை முதல்வருக்கு தலை மைச் செயலாளர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. அதன்பின், முப்படை வீரர்கள், தமிழக காவல்துறை, கடலோர காவல்படை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
திமுக பங்கேற்பு
திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரவிச்சந்திரன், தாயகம் கவி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு கடற்கரை சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடலில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வந்தனர். காமராஜர் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப் படவில்லை. போர் நினை வுச் சின்னம் முதல் பட்டினப்பாக்கம் வரை கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது.
Share:

வென்றது ஜல்லிக்கட்டு புரட்சி! தகர்ந்தது தடை! அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்!!

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
மிருகவதை என்ற பெயரால் தமிழரின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகாலமாக இத்தடை உடையும் என தமிழகம் காத்திருந்தது.
ஆனால் தடை உடையவில்லை. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு தமிழக மக்கள் போர்க்களத்தில் குதித்தனர். அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி வைத்த புரட்சி விதை தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது.
சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் 5 நாட்களாக திரண்டு போராடினர். ஒட்டுமொத்த தமிழகமே வீதிக்கு வந்து போராடியதால் வேறுவழியின்றி அரசுகள் பணிந்தன.
மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்திருக்கிறார். வரலாற்றில் இடம்பிடித்த ஜல்லிக்கட்டுப் புரட்சி தடையை உடைத்து சரித்திரம் படைத்திருக்கிறது!
வென்றது தமிழர் படை!
Share:

அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல்? அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்!


சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்றும், நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தேவையான அம்சங்களை கொண்ட சட்ட முன் வரைவை தமிழக அரசு உருவாக்கி, முதலில் அந்த அவசர சட்ட முன் வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்தது. அதை பரிசீலித்த ராஜ்நாத்சிங் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்ட முன் வடிவு சட்ட அமைச்சகத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 2 அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு அளித்தன. மத்திய அரசின் மூத்த வக்கீல் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கியும் தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மேலும் நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். இதையடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார். அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார் என தெரிகிறது. எனவே இன்று இரவு அவசர சட்டம் வெளியாகும் என தெரிகிறது. இதையடுத்து, அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார். இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார். அரசின் இந்த நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் என்பதை உறுதி செய்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியபடி, வாடி வாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். இதன் வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கி கொள்ளும்வகையில், முதல்வரே போட்டியை நேரடியாக தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share:

ஜல்லிக்கட்டு: திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் | படம்: எல்.சீனிவாசன்.
திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் | படம்: யாகூப்

ஜல்லிக்கட்டு எந்த ஆண்டிலும் தடைபடாமல் நடைபெற மத்திய அரசு அறிவிக்கையில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வள்ளுவர் கோட்டம் முன்பு திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் இனி எந்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைபட்டு விடாமல், ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும் தொடர்ந்து நடக்க்கும் வகையில் மத்திய அரசு தனது அறிவிக்கையில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (21-01-2017) காலை 8 மணி முதல் சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், திமுக தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் தமிழர்கள் போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக சிகாகோவில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரபலங்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்காக அவர்களும் தங்களுடைய நாடுகளில் போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு அறப்போராட்டத்துக்கு 700க்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு தங்களுடைய ஆதரவை வழங்கினார்கள். அங்கு தற்போது கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. அதனையும் பொருட்படுத்தாது இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய ஆதங்கத்தை மேடையில் பேசினார். இந்நிகழ்ச்சியை அன்புச்செல்வன், லியோ, ஸ்ரீ லாலா ,வரதேஷ் சென்னிகிருஷ்ணன், சவடா, விமலன், சிவா, திரு மற்றும் ராஜேஷ் சுந்தர்ராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள் போராட்டத்துக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட செலவுகளுக்காக பணமும் அனுப்ப தீர்மானித்துள்ளார்கள்.
Share:

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் திடீர் திருப்பம்: குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல்- சென்னைக்கு அனுப்பிவைப்பு

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மெரினாவுக்கு மாட்டு வண்டியில் வந்த மக்கள் | படம்: க.ஸ்ரீபரத்.


நாளை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை இரவு) திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு குடியரசு தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிய வந்தமையால், அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடியாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னை அனுப்பப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தமிழக அரசின் அவசர சட்டம் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டம், சுற்றுச்சுழல், கலாச்சாரம் ஆகிய அமைச்சகங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டது. இதற்காகவே, காத்திருந்த அதன் மத்திய அமைச்சர்கள் அதில் தம் கருத்துக்களை சில மணி நேரங்களில் பதிவு செய்து மாலையே அனுப்பி விட்டனர்.
இதற்கு இறுதி வடிவம் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் அவசர சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பியது.
இதில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அவசரசட்ட முன்வடிவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுப்பலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனால், இன்று (சனிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் இறுதி செய்யப்பட்ட முன்வடிவு சென்னை தலைமை செயலகத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டு விட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், "சில விஷயங்களை குடியரசு தலைவரின் சார்பில் எங்கள் அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் என உள்ளது. இதை குடியரசு தலைவருக்கு அந்த சட்டமுன்வடிவை அனுப்பிய பின் சில அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
எனவே, இதை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இன்று நேரடியாக தமிழக அரசிற்கு அனுப்பி விட்டோம். உதாரணமாக, எங்களைப் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி அமர்வு குடியரசு தலைவரால் அமர்த்தப்படுகிறோம். இதற்காக, அவர் சார்பில் எங்கள் அமைச்சகம் தான் கையெழுத்து இட்டு உத்தரவு அனுப்புகிறது. அதுபோலத்தான் இந்த விஷயத்தையும் கருத வேண்டும்" எனக் கூறினர்.
சட்ட திருத்தம்
தமிழக அரசால் உயற்றப்படும் அவசர சட்டங்கள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றவை மற்றும் இடம்பெறாதவை என இருவகைகள் கொண்டவை. இதில் ஜல்லிக்கட்டு மீதான சட்டம் பொதுப்பட்டியல் எண்-3 ல் இடம் பெற்றுள்ளது. எனவே, இதை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின் தற்போது இயற்றப்படுகிறது. அப்பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ள ‘மிருகவதை அவசர சட்டம் 1960-ல் திருத்தம் செய்து இந்த அவசரசட்டம் இயற்றப்படுகிறது. இதன்படி, ஜல்லிக்கட்டு என்பது மிருகவதையில் வராது என்றாகி விடும். இதுவும் தமிழகத்தில் மட்டுமே அமலாகும்.
நாளை ஜல்லிக்கட்டு
சென்னை வரும் அவசர சட்டத்தின் முன்வடிவு, தலைமை செயலக அதிகாரிகளால் ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பப்படும். அவர் அதை சரிபார்த்த பின் கையெப்பம் இட்டு அவசர சட்டத்தை இன்று மாலையே இயற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து தமிழகத்தில் ஜல்லிகட்டு நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.
Share:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மற்றும் புறநகரில் 20 லட்சம் கடைகள் அடைப்பு: போக்குவரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image result for சென்னை மற்றும் புறநகரில் 20 லட்சம் கடைகள் அடைப்பு:



ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமி ழகம் முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் நேற்று போராட் டங்கள் நடந்ததால் கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, பொதிகை உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
இதனால் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் தாமதமாக சென்னை வந் தடைந்தன. திருச்சி மானா மதுரை, ராமேஸ்வரம் திருச்சி, மதுரை செங்கோட்டை உட்பட 11 ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டது. இணை ரயில்கள் வருவதில் தாமதம் ஏற் பட்டதால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில், மளிகை, காய்கறி கடைகள், ஹோட்டல்கள், ஜவுளி, நகைக்கடைகள் உட்பட சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கடை கள் மூடப்பட்டிருந்தன. மூடப்பட்டி ருந்த கடைகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. இதில், அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா உட்பட ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். இதே போல், தமிழகம் முழுவதும் திரையங்குகளில் நேற்று காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரை யரங்குகள் வெறிச்சோடி காணப் பட்டன. தமிழகம் முழுவதும் 18 ஆயி ரம் தனியார் பள்ளிகள் மூடப்பட்டி ருந்தன. ஆம்னி பேருந்து களும் நேற்று பகலில் இயக்கப் படவில்லை.
அரசு போக்குவரத்து ஊழியர் கள், ஆட்டோ தொழிற்சங்கங்களும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சில பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பெரும்பாலான தொழி லாளர்கள் பணிக்கு வராததால் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையும் நேற்று குறைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லம் அருகே நேற்று மாலையில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று, ஜல் லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சென்ற தொழிலாளர் கள், போதிய பேருந்து மற்றும் ரயில்சேவை இல்லாததால் வீட் டுக்கு திரும்பினர். பெரும்பாலான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கவில்லை. லாரிகளின் சேவையும் நிறுத்தப்பட்டதால், சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது.
பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களும் பங்க்குகளை மூடி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் பொதுமக்கள், மாணவர் - இளைஞர் அமைப்புகள், திமுக சார்பில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் சென்னை கடற்கரை தாம்பரம், சென்னை கடற்கரை செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி, நிறுத்தி இயக்கப்பட்டன.
இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
Share:

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு ட்ரம்ப்: பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப் | படம்: ஏஎப்பி

அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் (70) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009-ல் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்றார். பின்னர் 2013-ல் 2-வது முறையாக ஒபாமா அதிபராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இருந் ததையடுத்து, கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது.
இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்பும் போட்டி யிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினரா். இதனிடையே, ஹிலாரி வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதையெல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மைதானத்தில் (கேப்பிட்டால்) பதவி யேற்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒபாமா, பில் கிளின் டன், ட்ரம்ப் குடும்பத்தினர், ஹிலாரி கிளின்டன் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இவ்விழாவில், வரலாற்று சிறப்பு மிக்க ஆப்ரகாம் லிங்கனின் பைபிளின் மீது டொனால்டு ட்ரம்ப் தனது கையை வைத்து, நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். முன்னதாக, மைக் பென்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
முன்னதாக, வெள்ளை மாளிகை யில் ஒபாமாவை ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் ட்ரம்ப்-மெலனியா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்துக்கு வந்தனர்.
பதவியேற்றுக்கொண்ட பிறகு ட்ரம்ப் பேசும்போது, “இந்த நாள் உங்களுடையது, இந்த விழா உங்களுடையது, இது உங்கள் நாடு. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அமெரிக்கர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடையும் வகையில் இருக்கும்” என்றார்.
மோடி வாழ்த்து
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ட்ரம்புக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி கூறும்போது, “இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்து ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்றார்.
Share:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டத்தில் குதித்த போலீஸார்: பதறிய உயர் போலீஸ் அதிகாரிகள்

போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய காவலர் மாய அழகுவிடம் விசாரணை நடத்தும் மயிலாப்பூர் சரக துணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் | படங்கள்: ச.கார்த்திகேயன்



சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவான தொடர் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் இரு போலீஸார் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் பதட்டத்துக்கு உள்ளாயினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் 4-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழர் மரபு மற்றும் ஜல்லிக்கட்டின் சிறப்புகள் குறித்து ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது அங்கு சீருடையில் பணியில் இருந்த, புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவு காவலர் மாய அழகு, திடீரென கூட்டத்துக்குள் நுழைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக மைக்கில் பேசினார். இது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
உடனே பேச்சை நிறுத்தும்படி அறிவுறுத்தினர். போராட்டக் குழுவி னர், போலீஸாரை தடுத்து நிறுத்தினர். சீருடையில் பேசியது தவறு என்றதும், காவலர் மாய அழகு, சீருடையை கழற்றினார். பின்னர் போராட்டக் குழுவினர் வேண்டுகோளுக்கு இணங்க மீண் டும் சீருடையை மாட்டிக்கொண்டு, அங்கு வந்திருந்த மயிலாப்பூர் காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்பு சல்யூட் அடித்து, நின்றார். அவரை காவல்துறையினர் துன் புறுத்த வாய்ப்புள்ளது எனக்கூறி, போராட்டக் குழுவினர் போலீஸாரி டம் காவலர் மாய அழகுவை ஒப்படைக்க மறுத்தனர். எதுவும் செய்யமாட்டோம் என்று போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, காவலரை அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போக்கு வரத்து காவலர் விஜயகுமார் என்பவர், சீருடையில் வந்து தானும் போராட்டத்துக்கு ஆதர வாக பேசுவதாக போராட்டக் குழு வினரிடம் கூறினார். பிரச்சினையில் சிக்க வேண்டாம் என்று கூறி, போராட்டக் குழுவினர், அந்த காவ லரை திருப்பி அனுப்ப முயன்றனர். காவலர் பிடிவாதமாக இருந்ததால், போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது கருப்பு சட் டையை கழற்றி கொடுக்கவே, அதை அணிந்துக்கொண்டு, போராட்டத்தில் பங்கேற்று காவலர் பேசினார்.
இதனால் பதறிப் போன போலீஸார், அவரையும் பிடித்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பானது.
Share:

தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் செய்வதே இலக்கு: மனம் திறக்கும் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங். | படம்: ஏ.எஃப்.பி.



இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக் கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் அபார மாக விளையாடி 150 ரன்கள் விளாசினார். சுமார் 6 வருடங் களுக்கு பின்னர் அவர் சதம் அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது.
யுவராஜ் சிங்குடன் விளை யாடிய மூத்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும் புற்று நோயில் இருந்து மீண்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் திறம்பட செயல்பட்டு கடுமையான போராட்டத்துக்கு பிறகு அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
கட்டாக் போட்டியில் அவர் விளையாடிய விதம் பழைய யுவராஜ் சிங்கை நினைவுப் படுத்தும்விதமாகவே இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மற்ற வீரர்களிடமும் இந்த நம்பிக்கையை காணமுடிந்தது. இது எனக்கு முக்கியமானதாக அமைந்தது. கிரிக்கெட் பயணத்தை தொடரவா, வேண்டாமா என சிந்திக்கும் காலமும் உருவானது. இந்த பயணத் தில் எனக்கு ஏராளமானோர் உதவினர். ஒருபோதும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற கோட் பாடுடன் கடினமாக உழைத்தேன். காலம் அனைத்தையும் மாற்றும் என புரிந்துகொண்டேன். 6 வருடங்களுக்கு பிறகு சதம் அடித்தது சிறப்பான அம்சம்தான்.
புற்று நோயில் இருந்து குண மடைந்து அணிக்கு திரும்பியதும் 3 ஆண்டுகள் கடினமாக இருந்தது. உடல் பயிற்சிக்காக கடினமாகவும் உழைக்க வேண்டியது இருந்தது. மேலும் அணியில் இடம் பெறு வதும் நீக்கப்படுவதுமான நிலை இருந்தது. நிரந்தர இடத்தை பெறுவதற்கான நம்பகமான வீரராகவும் இல்லாமல் இருந்தேன்.
உள்ளூர் போட்டிகளில் எனது பேட்டிங் மீது அதிக கவனம் செலுத் தினேன். இதனால் பந்துகளை விரட்டி அடிக்கவும் முடிந்தது. செய்தித் தாள், தொலைக்காட்சி ஆகியவற்றை பார்க்காமல் முழுமையாக எனது ஆட்டத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி எனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்தேன்.
எனக்கான நேரம் வரும் வரை காத்திருந்தேன். சர்வதேச அளவி லான போட்டிகளில் விளையாடு வதற்கு இன்னும் தகுதியுடனே உள்ளேன். தற்போது என்னுடைய இலக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான். 150 ரன்கள் என்பது ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரியதுதான்.
எனது அதிகபட்ச ரன்குவிப்பான இது, நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்துள்ளது. எனினும் மகிழ்ச்சியாகவே உள்ளது. வரும் காலங்களிலும் எனது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தோனியும், நானும் இந்திய அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இது ரன் சேர்க்க உதவியாக இருந்தது. வருங் காலத்திலும் இது கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
Share:

பரபரப்பான ஆட்டத்தில் தொடரை வென்றது இந்தியா

திருப்பு முனை ரன் அவுட்.| பும்ரா அதிரடி சத இங்கிலாந்து கேப்டன் மோர்கனை ரன் அவுட் செய்கிறார். | படம்.| கே.ஆர்.தீபக்.
திருப்பு முனை ரன் அவுட்.| பும்ரா அதிரடி சத இங்கிலாந்து கேப்டன் மோர்கனை ரன் அவுட் செய்கிறார். 


கட்டாக் ஒருநாள் போட்டியில் 382 ரன்கள் மகாவிரட்டலில் ஈடுபட்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் வரை வந்து தோல்வி அடைந்தது. இதனால் 2-0 என்று இந்தியா கோலி தலைமையில் முதல் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

மொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 747 ரன்கள். யுவராஜ், தோனி, பிறகு மோர்கன் என்று 3 அருமையான சதங்களை இன்று ரசிகர்கள் விருந்தாகப் பெற்றனர். கட்டாந்தரை பிட்சில் தொடக்கத்தில் கிறிஸ் வோக்ஸ் தவண், ராகுல், கோலியை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும், பிற்பாடு ஜடேஜா தொடர்ச்சியாக 10 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிக முக்கியமான ஜேசன் ராய் (82) விக்கெட்டை அருமையான பந்தில் கைப்பற்றி இந்தப் பிட்சில் ஒரு அரிய சிக்கனத்தை வெளிப்படுத்த நடு ஓவர்களில் ரூட் (54), ஸ்டோக்ஸ் (1), ஜோஸ் பட்லர் (10) ஆகியோரை அஸ்வின் வீழ்த்தயதும் கட்டாந்தரையில் வீசிய அருமையான பந்து வீச்சுகளுக்கு உதாரணமாகும்.

இந்தக் கட்டத்தில்தான் 20 ஒவர்களில் 128/1 என்று சென்று கொண்டிருந்த இங்கிலாந்து ஜடேஜா, அஸ்வின் பவுலிங்கினால் 31.2 ஓவர்களில் 206/5 என்று ஆனது. அதாவது ஜோஸ் பட்லர், அஸ்வின் பந்தில் எகிறி வரப்பார்க்க, அதனை கவனித்த அஸ்வின் பந்தை லெக் திசையில் வேகமாக வீச பட்லரை தோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார். 

31.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில்தான் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பை அளித்த கூட்டணியாக மோர்கனுடன் மொயின் அலி சேர்ந்தார்.

மொயின் அலி அஸ்வினை 2 சிக்சர்களையும் பாண்டியாவை ஒரு சிக்சரையும் அடித்தார். மொயின் அலி 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்தார். மோர்கனும் இவரும் இணைந்து 12 ஒவர்களில் 93 ரன்களை விளாச 43.3 ஓவர்களில் 299/5 என்று இங்கிலாந்து உயிர்ப்பு பெற்ற நிலையில் புவனேஷ் குமாரின் வெளீயே சென்ற பந்தை மொயின் அலி ஆடிக்கப் போய் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். வோக்ஸ். பும்ராவின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், அவர் 5 ரன்களையே எடுத்தார்.

44.2 ஓவர்களில் 304/7 என்ற நிலையில் லியாம் பிளென்கெட், மோர்கனுடன் சேர்ந்தார், இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர், மோர்கன் காட்டடி தர்பாரில் இறங்கினார், அருமையாக ஆஃப் திசையில் இடைவெளியைப் பயன்படுத்தி பவுண்டரிகளை அடித்து வந்தார், மேலும் பந்து ஈரமாக இருந்ததால் பும்ரா, புவனேஷ் அதிகம் புல்டாஸ்களை வீசினர். பாண்டியா 6 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டார். பிளென்கெட், மோர்கன் இணைந்து ஸ்கோரை 354 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 

மோர்கன் மிக அருமையாக விளையாடி ஒரு முனையில் தனிமனிதனாக அச்சுறுத்தி 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 81 பந்துகளில் 102 ரன்கள் என்று கேப்டன் இன்னிங்ஸ் ஆடி இந்தியாவை கதி கலக்கினார். ஏனெனில் 381 ரன்களுமே போதவில்லை என்றால் பிட்சை இன்னும் எப்படித்தான் போடுவது என்று கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் சிக்கல் எழுந்திருக்கும். ஒருவேளை அடுத்து இரு அணிகளும் 500 ரன்களுக்கான பிட்ச் அமைக்க வாய்ப்புண்டு!

இந்நிலையில்தான் பும்ரா ஒரு பந்தை யார்க்கர் லெந்தில் வீச அதனை பிளென்கெட் நேராக பும்ராவிடமே அடித்தார், ஆனால் மோர்கன் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு நடுபிட்சில் இருந்தார், பும்ரா பந்தை ரன்னர் ஸ்டம்பில் அடிக்க மோர்கன் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து 366/8 என்று அருகில் வந்து தோற்றது, நல்ல ‘ஸ்பிரிட்டட் சேஸ்’ என்பார்களே அதைத்தான் இன்று ரசிகர்கள் பார்த்தனர்.

முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் பும்ராவின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை தோனியிடம் கேட்ச் கொடுத்தார், வழக்கமாக அதிரடி பின்னி எடுக்கும் ஜேசன் ராய் இன்று நிதானம் கடைபிடித்து பிறகு அடித்து ஆடினார், அவர் 73 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார். இது திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

ஜோ ரூட் 55 பந்துகளில் அனாயசமான 8 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆகி கோலியிடம் மிட்விக்கெட்டில் சிக்கினார். ராய், ரூட் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 100 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர். 

அஸ்வினை கோலி மிகவும் பின்னால்தான் கொண்டு வந்தார், அஸ்வின் 20-வது ஓவரில்தான் கொண்டு வரப்பட்டார், இது நல்ல முடிவு, காரணம் வந்தவுடனேயே ரூட்டை வீழ்த்தினார். இந்தப் பந்தை அஸ்வின் வழக்கத்தை விட தூக்கி மெதுவாக வீச ஸ்லாக் ஸ்வீப் ஆடப் போன ரூட்டின் மட்டைக்கும் பந்துக்கும் கொஞ்சம் அதிகம் இடைவெளி இருந்ததால் டாப் எட்ஜ் எடுத்தது. ரூட் விக்கெட்டுக்குப்பிறகுதான் ராயும் மோர்கனும் 42 ரன்களை 6 ஓவர்களில் சேர்த்தனர் அப்போது ஒருமுனையில் தொடர்ச்சியாக வீசி வந்த ஜடேஜா ராயை பவுல்டு செய்தார். அதிலிருந்து இங்கிலாந்து சற்றே திணறத் தொடங்கியது.

ஆனால் மோர்கன், மொயின் அலி, பிளென்கெட் முயற்சி வீணானது, இந்தியா தொடரைக் கைப்பற்றியது, ஒருவேளை மோர்கன் அவுட் ஆகவில்லை என்றால் இங்கிலாந்து வென்றிருக்கலாம் இவ்வளவு பெரிய இன்னிங்சை ஆடிய மோர்கன் அந்த சிங்கிளை ஏன் எடுக்க அரை பிட்சிற்கு வேகமாக முன்னேற வேண்டும்? அதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு ஆர்வமூட்டும் திருப்பு முனைத் தன்மை. அந்த ரன் அவுட் இங்கிலாந்துக்கு தொடரை இழக்கச் செய்துள்ளது. 

ஆட்ட நாயகனாக 150 ரன்களை விளாசிய ‘ஸ்டைலிஷ்’ யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
Share:

நாளை தமிழகத்தில் ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடையாக உள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் 20-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தன.
இதைத் தொடர்ந்து தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது. இதனால் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது. தமிழகத்தில் 10 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
Share:

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடக்கவில்லை எனக் கூறுவதா?- முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடக்கவில்லை எனக் கூறியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது எங்கும் தடியடி நடத்தப்படவில்லை என அவர் கூறியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்த்தோம். நானும் பார்ததேன். முதல்வர் பார்க்கவில்லை என கருதுகிறேன். எனவே, அவருக்கு அந்தக் கட்சியை போட்டு காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share:

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக் கோரி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திமுக ரயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின்


ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக சட்டம் இயற்ற மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடியும், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தியும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று தீர்மானமாக மறுத்து விட்ட மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு தமிழக மக்கள் விரோத போக்காக அமைந்து விட்டது.
காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவது, 'வார்தா' புயல் நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்து மத்தியில் இருக்கும் பாஜக அரசு தமிழக நலனை துளியும் மதிக்காதது பிரதமர் பெருமையாக பேசி வரும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி இறுதித் தீர்ப்பு உரிமையை பறித்த மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் முறையிடவே மறுப்பது தங்கள் கட்சி வெற்றி பெறும் மாநிலத்தின் கண்ணில் வெண்ணெய். வெற்றி பெற முடியாத மாநிலத்தின் கண்ணில் சுண்ணாம்பு என்ற அநீதிக் கொள்கையை கடைபிடித்து இன்றைக்கு மத்திய- மாநில உறவுகளை கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.
உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து திமுக மாநில உரிமைகளுக்காக போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் லாபம் தங்களுக்கு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக உரிமைகளை, தமிழக மக்களின் நலன்களை புறக்கணிக்கும் செயலை திமுக ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் மத்திய அரசிடம் மாநில உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் மூச்சுத் திணறி நிற்கிறது. திமுகவின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் எனவும், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் விடுத்த கோரிக்கை பற்றி இதுவரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஊழலில் திளைக்கும் அதிமுக அரசிடமிருந்து இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தமிழக மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு அடங்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வீறுகொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. மொழிப்போராட்டம் நடைபெற்ற போது கிளர்ந்து எழுந்த எழுச்சி இப்போது தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எதிரொலிக்கிறது.
ஆகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாத உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் ரயில் மறியல் அறப்போராட்டம் நடைபெறும். திமுக உடன்பிறப்புகள் ஜனநாயக முறையில் இந்த போராட்டத்தை நடத்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share:

சென்னை, மதுரையில் அடுத்த கட்ட போராட்டம் வெடித்தது... ரயில்களை மறித்து இளைஞர்கள் ஆவேசம்


சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பகல் 12 மணி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்திருந்தனர். ஆனால் 12 மணியை கடந்தப் பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னையில் போராட்டக்குழுவினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று பிரதமரை நேரில் சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேசினார்.
ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற முடியாது என பிரதமர் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் அவசர சட்டம் இயற்றக்கோரி மெரினா போராட்டக்குழு இன்று பகல் 12 மணி வரை கெடு விதித்திருந்தது.
கெடு முடிந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சேலத்தில் காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞர்கள் மத்திய அரசுக்கும் பீட்டாவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
மதுரையிலும் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Share:

பிரதமர் அலுவலகம் முன் தர்ணா: அன்புமணி கைது


ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கோரி பிரதமர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாமக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுகுறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திக்க மறுத்ததைக் கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் முன் போராட்டம் நடத்திய பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி துக்ளக் சாலை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ஆம் தேதி அன்று பாமக சார்பில் தடையை மீறி
Share:

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: முதல்வர் ஓபிஎஸ்


ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது தொடர்பான விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.
அவர் கூறும்போது, "ஜல்லிகட்டு விளையாட்டு நடத்துவது தொடர்பாக தமிழகத்தின் தார்மீக உரிமையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
தமிழக அரசின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டுக் கொண்டார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அதேவேளையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் என்னிடம் உறுதியளித்தார்.
இனி, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் எடுக்கும். நன்மையே யாவும் நன்மையாகவே முடியும். பொறுமையாக இருங்கள்" என்றார்.
Share:

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தலையிட ஹைகோர்ட் மறுப்பு


ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்பிரச்சினையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினாவில் 2-வது நாளாக புதன்கிழமை மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், "சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு கோரி நடைபெற்றுவரும் போராட்டம் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அப்படியிருந்தும் போராட்டக்காரர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கடற்கரை பகுதியில் செவ்வாய் இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர்கூட வழங்கப்படவில்லை" என வழக்கறிஞர் கே.பாலு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
ஆனால், தற்போதைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
இதற்கான காரணத்தை நீதிபதிகள் விளக்கியபோது, "ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் உயர் நீதிமன்றமோ மாநில அரசோ எதுவும் செய்வதற்கில்லை. மேலும், மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடமும் அல்ல. இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை" என்றனர்.
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook