மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலம்: முதல்வர் ஓபிஎஸ் கொடியேற்றினார்- விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்.
சென்னை மெரினாவில் கோலாகல மாக நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
இந்தியாவின் 68-வது குடி யரசு தினம், நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாக கொண் டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதல் முறையாக..
வழக்கமாக குடியரசு தினத் தன்று ஆளுநர்தான் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றார். இதனால், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வரே கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவுக்காக, காந்தி சிலை அருகே பிரம்மாண்டமான மேடை போடப்பட்டிருந்தது. அதன் எதிரே தற்காலிக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. விழா வைக் காண காலை 6 மணி முதலே ஏராளமானோர் கடற்கரை சாலையில் திரண்டிருந்தனர். நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக சாலையின் இருபுறமும் சவுக்குக் கட்டைகளால் தடுப்பு அமைத்திருந்தனர்.
காலை 7.50 மணிக்கு காவல் துறையினர் இருசக்கர வாகன அணிவகுப்புடன் முதல்வரை அழைத்து வந்தனர். முதலில் காமராஜர் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மாணவ, மாணவி கள், பொதுமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்தார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வரை, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தென்னிந்திய தலைமைப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த், கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் அலோக் பட்னாகர், ஏர் கமோடர் எஸ்.நிவாஸ், கடலோர காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ரா, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரை முதல்வருக்கு தலை மைச் செயலாளர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. அதன்பின், முப்படை வீரர்கள், தமிழக காவல்துறை, கடலோர காவல்படை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
திமுக பங்கேற்பு
திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரவிச்சந்திரன், தாயகம் கவி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு கடற்கரை சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடலில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வந்தனர். காமராஜர் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப் படவில்லை. போர் நினை வுச் சின்னம் முதல் பட்டினப்பாக்கம் வரை கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook