மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மேலும் நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். இதையடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார். அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார் என தெரிகிறது. எனவே இன்று இரவு அவசர சட்டம் வெளியாகும் என தெரிகிறது. இதையடுத்து, அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார். இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார். அரசின் இந்த நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் என்பதை உறுதி செய்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியபடி, வாடி வாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். இதன் வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கி கொள்ளும்வகையில், முதல்வரே போட்டியை நேரடியாக தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Home »
அவசர சட்டம்
,
ஜல்லிக்கட்டு
» அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல்? அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல்? அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மேலும் நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். இதையடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார். அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார் என தெரிகிறது. எனவே இன்று இரவு அவசர சட்டம் வெளியாகும் என தெரிகிறது. இதையடுத்து, அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார். இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார். அரசின் இந்த நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் என்பதை உறுதி செய்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியபடி, வாடி வாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். இதன் வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கி கொள்ளும்வகையில், முதல்வரே போட்டியை நேரடியாக தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment