தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக சிகாகோவில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரபலங்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்காக அவர்களும் தங்களுடைய நாடுகளில் போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு அறப்போராட்டத்துக்கு 700க்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு தங்களுடைய ஆதரவை வழங்கினார்கள். அங்கு தற்போது கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. அதனையும் பொருட்படுத்தாது இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய ஆதங்கத்தை மேடையில் பேசினார். இந்நிகழ்ச்சியை அன்புச்செல்வன், லியோ, ஸ்ரீ லாலா ,வரதேஷ் சென்னிகிருஷ்ணன், சவடா, விமலன், சிவா, திரு மற்றும் ராஜேஷ் சுந்தர்ராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள் போராட்டத்துக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட செலவுகளுக்காக பணமும் அனுப்ப தீர்மானித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment