ஜல்லிக்கட்டுபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர்.
தமிழக அரசு சார்பில் ஜல்லிக் கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப் பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் வலியுறுத்தினர். ஒரு சிலர் போராட் டத்தை கைவிட மறுத்ததால் அவர் களை போலீஸார் வலுக்கட்டாய மாக வெளியேற்ற முயன்றனர்.
இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. நடுக்குப்பம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் பெட் ரோல் குண்டு, பாட்டில், கல்வீச்சு, தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. போராட்டக் களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கல வரம் செய்ததாக மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித் தார். மோதலில் 142 போலீஸார் காயம் அடைந்தனர். 117 வாக னங்களும் சேதப்படுத்தப்பட்டன.
பாதிப்புக்கு உள்ளான நடுக்குப் பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச் சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட் டுக்கான போராட்டம் போன்று பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மீண்டும் போராட வருமாறு இளைஞர்கள், மாணவர்களுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட இளை ஞர்கள், மாணவர்கள் மெரினா அல்லது பெசன்ட் நகரில் ஞாயிற் றுக்கிழமை (இன்று) திரளப் போவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணை யர்கள் சங்கர், சேஷசாயி ஆகி யோர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மயிலாப்பூர், ஐஸ் அவுஸ், பட்டினப்பாக்கம், திருவல் லிக்கேணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், பேரணி, மனித சங்கிலி, தேவை இல்லாமல் கூடுதல், அணுமதி இல்லாமல் கூடுதல் போன்ற அனைத்துக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு உடனடி யாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும். குடும்பமாக செல்லவோ, நடை பயிற்சி மேற்கொள்ளவோ எந்தத் தடையும் இல்லை.இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக போலீஸார் மீது நடத் தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோக்களை அவர்கள் வெளியிட்டனர்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து மெரினா நேப்பியர் பாலம் வரை நேற்று மாலையில் இருந்தே போலீ ஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெசன்ட் நகர் கடற்கரை பகுதியி லும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற் கரையில் நின்று பேசிக்கொண்டி ருந்த சில மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்
No comments:
Post a Comment