திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை தலைமைப் பொறுப்பேற்குமாறு துரைமுருகன் கண்ணீர் மல்க அழைப்பு விடுத்தார்.
முன்னதாக காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கழகத்தின் பொருளாளர் க.அன்பழகன் தலைமையில் தொடங்கியது. இதனையடுத்து, திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழியும் தீர்மானத்தை அன்பழகன் வாசித்தார். அந்த தீர்மானம் பொதுக்குழுவில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக உரையாற்றிய துரைமுருகன், "தம்பி திமுகவின் செயல் தலைவராக தலைமை தாங்க வா. உண் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என கண்ணீர் மல்க அழைப்புவிடுத்தார்.
துரைமுருகன் அழைப்பு விடுக்கும்போது மு.க.ஸ்டாலினும் உருக்கமாக காணப்பட்டார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், ஸ்டாலின் சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை துணிச்சலுடன் எதிர்கொண்டதை சுட்டிக்காட்டினார். மேலும், ஸ்டாலினின் பேச்சாற்றலையும் பாராட்டிப் பேசினார்.
No comments:
Post a Comment