டி 20 தொடரை வெல்வது யார்? - இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடை பெறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் கான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுத்தது.
இந்த ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தல் பந்து வீச்சு, நடுவரின் தவறான தீர்ப்பு ஆகியவற்றின் சாதகமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற தற்போது தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெஸ்ட் தொடரை 4-0 என கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெற்றியின் தருணங்களை குறுகியவடிவிலான போட்டிகளுக் கும் சுமந்து வந்துள்ளது. ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றிய நிலையில் தற்போது டி 20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச அளவிலான கடைசி டி 20 ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற அனைத்து வகையிலும் இந்திய அணி போராடும். கடந்த இரு ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் யுக்திகள் பெரிய அளவில் பலன்கொடுக்கவில்லை.
டி 20 ஆட்டத்தில் இருமுனை யிலும் வீரர்கள் அதிரடி காட்டினால் மட்டுமே பெரிய அளவிலான ரன்களை குவிக்க முடியும். ஆனால் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி கடந்த இரு ஆட்டங்களிலும் 150 ரன்களை கூட தாண்டவில்லை.
அதிலும் 2-வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 71 ரன்கள் சேர்த்த போதும் மற்ற வீரர்கள் அனைவரும் கடைசி வரை பந்துகளுக்கு நிகராகவே ரன் சேர்த்தது அணியின் ரன்குவிப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு இன்றைய ஆட்டத்தில் கோலி தீர்வு காணக்கூடும்.
நாக்பூர் ஆட்டத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டுக்கு, நடுவர் சம்சுதின் தவறான அவுட் கொடுத்ததால் தான் போட்டியின் முடிவு மாறியதாக இங்கிலாந்து கேப்டன் கடும் குற்றம்சாட்டினார்.
சர்வதேச போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்த காலங்களில் எத்தனையோ ஆட்டங்களில் நடுவர் களின் தவறான முடிவால் இந்திய அணி தோல்விகளை சந்தித் துள்ளது. அப்போது இந்த அளவுக்கு கடுமையாக யாரும் குற்றச் சாட்டுகளை முன்வைக்கவில்லை.
டி 20 போட்டிகளில் ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அதனால்தான் தோல்வி என்று சாக்குபோக்கு சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை. ஜாஸ் பட்லரும், அவருக்கு பின் களறிங்கிய மொயின் அலியும் சிறந்த பேட்ஸ்மேன்கள்தான்.
நடுவர் வழங்கிய அந்த ஒரு தீர்ப்பால் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றுவிடவில்லை. அதன் பிறகு 5 பந்துகளையும் பும்ரா நேர்த்தியாக வீசியதால்தான் வெற்றி வசப்பட்டது.
அதிலும் பும்ரா கடைசி பந்தை புல்டாசாகவே வீசினார். இந்த பந்து மட்டும் மொயின் அலி மட்டையில் சரியாக சிக்கியிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது மோர்கனின் குற்றச்சாட் டுக்கும் இடம் இல்லாமல் போய் இருக்கும்.
மோர்கனின் குற்றச்சாட்டு வெற்றியானது தங்கள் அணியிடம் இருந்து பறிக்கப்பட்டது என்பது போலவே உள்ளது. மிரட்டும் பேட்டிங் வரிசையை கொண்ட அந்த அணி இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க முயலும்.
குக் தலைமையிலான இங்கி லாந்து அணியைவிட மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சற்று மாறுபட்டது. எவ்வளவு பெரிய இலக்கையும் துணிவுடன் கடைசி வரை போராடி எட்டிப்பிடிக் கும் திறன் கொண்டது. இதனை கடந்த ஆண்டு இந்தியாவில் நடை பெற்ற டி 20 உலகக் கோப்பையின் சில ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.
சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி இழந்தாலும், அந்த அணியின் பேட்டிங்கை குறைகூற முடியாது. முதல் டி 20 ஆட்டத்திலும் அந்த அணி நேர்த்தியாகவே விளையாடியது. போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானம் முழுவதும் பேட்டிங் குக்கே சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதலில் பேட் செய்யும் அணி தாராளமாக 170 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் கடைசியாக இந்திய அணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி 20 உலகக் கோப்பையில் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்திலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்திலும் இந்தியா வுக்கு சாதகமாக அமைந்த ஒரே நல்ல விஷயம் கடைசி ஓவர் பந்து வீச்சுதான். இதை தவிர்த்து இந்திய அணி பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது.
நாக்பூர் ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டான், பென் ஸ்டோக்ஸ், டைமால் மில்ஸ் ஆகியோர் இந்திய அணியை பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க அனுமதிக்க வில்லை. மேலும் அந்த அணி யின் பீல்டிங்கும் அருமையாக இருந்தது.
இதனால் இங்கிலாந்து அணி கையாளும் குறைந்த வேகத்தில் பந்து வீசும் யுக்தி குறித்து பயிற்சி யாளர் அனில் கும்பிளேவுடன் ஆலோசனை நடத்தி விராட் கோலி தீர்வு காணவேண்டும்.
அதிரடி வீரர்களான கோலி, யுவராஜ் சிங், தோனி, ரெய்னா ஆகியோரிடம் இருந்து இரு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியான வகையில் பெரிய அளவிலான ரன்குவிப்பு இல்லை. இதனால் பேட்டிங்குக்கு சொர்க்க புரியாக திகழும் சின்னசாமி மைதானத்தில் இவர்கள் மட்டையை சுழற்ற வாய்ப்பு உள்ளது.
கே.எல்.ராகுல் பார்முக்கு திரும்பி இருப்பது சாதகமான விஷயம். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக் கூடும். தொடரை வெல்லக்கூடிய கடைசி ஆட்டமாக இருப்பதால் இந்திய அணியில் மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
அப்படியே மாற்றம் இருக்கு மானால் ஹர்திக் பாண்டியா அல்லது மணீஷ் பாண்டே ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு ரிஷப் பன்ட் அல்லது புவனேஷ்வர்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். ஆனால் கடைசி போட்டியில் பரிசோதனை முறையை அணி நிர்வாகம் கையில் எடுக்குமா? என்பது சந்தேகம்தான்.
பெங்களூரு சின்னசாமி மைதானம் புதிதாக சீரமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் ரூ.4.5 கோடி செலவில் சப்-ஏர் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தி, மைதானம் முழுவதும் ' ரெய்ன் ஃபுரூப்' வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் போட்டியின் போது மழை பெய்தாலும் அடுத்த 30 நிமிடங்களுக்குள் மைதானத்தை தயார் செய்துவிட முடியும். சப்-ஏர் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் மூலம் மைதானத்தில் நிரம்பும் தண்ணீரை, மைதானத்துக்கு அடியில் பதித்துள்ள பைப்புகள் மூலம் இழுத்து கால்வாயில் விடப்படும். நீர் இழுத்தபின் அதே பைப் வழியாக வெப்பமான காற்று சப்ளை செய்யப்படும்.
இதனால் சில நிமிடங்களிலேயே மைதானத்தில் உள்ள ஈரப்பதம் முழுமையாக உலர்ந்து 30 நிமிடங்களில் மீண்டும் விளை யாடும் வகையில் மைதானம் தயாராகிவிடும். இதுபோன்ற தொழில்நுட்பம் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட மைதானங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அணிகள் விவரம்:
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், மன்தீப் சிங், யுவராஜ் சிங், தோனி, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.
இங்கிலாந்து:
மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், சேஷம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, அடில் ரஷித், டேவிட் வில்லி, லயிம் டாவ்சன், டைமால் மில்ஸ், லயிம் பிளங்கெட், கிறிஸ் ஜோர்டான், ஜேக் பால்.
நேரம்: இரவு 7 மணி
ஒளிரபப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook