சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி!


இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் புனேவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களில் சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக புஜாரா 31 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை மிரட்டிய, ஸ்டீவ் ஒகேஃப் இரண்டாவது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
இரு அணி அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. 
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook