இன்று பிப்-17, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் கோவை, கடையநல்லூர், அதிராம்பட்டினம் ஆகிய 3 இடங்களில் யுனிட்டி மார்ச் எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் என்.எம் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பெரிய கடைத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈசிஆர் சாலையை கடந்து பள்ளிச்சாலை வழியாக கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடக்க இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட மேடையை நோக்கி சென்றடைந்தது. இப்பேரணியில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் என்.எம் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பெரிய கடைத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈசிஆர் சாலையை கடந்து பள்ளிச்சாலை வழியாக கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடக்க இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட மேடையை நோக்கி சென்றடைந்தது. இப்பேரணியில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment