ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் 'ரயில்வே துறை' தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
* ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
* நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும்.
* 2017 - 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும்.
* இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும். கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
* 7,000 ரயில் நிலையங்கள் சூரிய மின் திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.
* ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.
No comments:
Post a Comment