ஐ.பி.எல் போட்டியில், புணே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்கி, புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நியமனம் செய்துள்ளனர்.
புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐ.பி.எல் 9வது சீசனின் போது புனே அணி மோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது. 14 போட்டிகளில் 5 வெற்றியை மட்டுமே பெற்றது. இதன் காரணமாகவே தோனி நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தாம் முழு ஒத்துழைப்பை தருவதாக தோனி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment