அதிரை அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

அதிரை அலையாத்தி காடுகளுக்கு சைபீரியா நாடு மற்றும் இமயமலை குளிர் பிரதேசங்களில் வசிக்கும் கடல் ஆழா என்கிற நீர்காகம் வகையை சேர்ந்த பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. அதிராம்பட்டிணத்தில் தொடங்கும் இந்த அலையாத்திக்காடுகள் முத்துப்பேட்டை வழியே தொண்டியக்காடு பகுதி வரை சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரை கடற்கரை ஓரத்தில் சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளன.

இதில் அதிராம்பட்டிணம் கடற்கரை பகுதி அலையாத்திக்காடுகள் அதிகளவில் ஈரப்பதம் நிறைந்த மிக பழமையான அடர்த்திமிகுந்த உயரமான மரங்களை கொண்ட காடாகும். இந்த சீசனில் சைபீரியா, ஆஸ்திரேலியா, இந்தோனே சியா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் வடபகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து செங்கல் நாரை, குளக்கிடா, கடல்ஆழா, மையில்கால் கோழி, பனங்கொட்டை, சிறவி பாம்பு தாரா, நத்தகொத்தி நாரை, பவளக்கால் உள்ளான், பூநாரை, சாம்பல் நாரை, நாமக் கோழி, வெள்ளைக் கொக்கு என பல வகையான பறவைகள் இந்த அலையாத்திக்காடுகளுக்கு வந்துள்ளன.
கடற்கரையை ஒட்டிய காந்திநகர் மற்றும் கரையூர் தெரு பகுதிகளில் உள்ள சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்ள கடல்ஆழா என்கிற நீர்காகம் சைபீரியா நாட்டிலிருந்து வந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook